(இ-ள்.)
வாரியோட்டில் - நீர் ஓடையில், வலாகு - கொக்கானது,
அரித்திட்டதேபோல் - தனக்குபயோக மில்லாவஸ்துவை
நீக்கித்
தனக்கு வேண்டும் வஸ்துவைக் கிரகிப்பதுபோல், (புத்தனாகற்பாலோன்,
போதிசத்துவன் சம்சாரத்துணின்று)
பாரமீதைகள் பத்தும் -
பத்துவிதமான பாரமீதைகள் என்னும் குணநிறைவுகளை, பயின்று -
அப்பியசித்துப் பெற்று, அவத்து - அவஸ்து அல்லது நிர்வாணமடைய
வேண்டுமென்ற, ஆர்வத்தோடு - விருப்பதுடன், மறித்து - திரும்பவும்
(தன் இஷ்டப்படியே, பாரமீதைகளையடைந்ததால் புத்தனாகப் பிறந்து)
அறிவு - போதி அல்லது ஞானத்தை, எய்திடின் - பெறுவானாகில்,
நேரில் - (அந்தப் புருஷன்) நேராகவே, நித்தமும் - நித்தியத்தையும்,
ஒட்டினனாகுமே - பொருந்தினவனாகும், எ-று.
ஒரே புருஷன் போதி
சத்துவனாய்ப் பாரமிதைகள் என்று
சொல்லப்படும் பத்துக் குணங்களைப் பூர்த்திசெய்து, மறுஜன்மத்தில்
புத்தனாகப்பிறந்து போதியடைந்து நிர்வாணம் பெறுவானாகில்
க்ஷணிகவாதத்தின்படி அனித்தியனாயிராமல்
நித்தியனாகவும்
ஆகிறான்.
பாரமிதை பத்தாவன : தானம்,
சீலம், க்ஷமை, வீரியம், தியானம்,
பிரஜ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம், இவைகள் பெருகி நிறைதல்
பாரமிதையாம்.
"கபிலையம்பதியி
னளம்பரும்
பாரமிதை யளவின்று நிறைத்துப்
போதி
மூலம் பொருந்திவந் தருளித்
தீதறு
நால்வகை வாய்மையுந் தெரிந்து"
என்று மணிமேகலை வஞ்சிமாநகர்புக்க காதையிலும், (41 - 48).
"ஆதி
முதல்வன் போதி மூலத்து
நாத
னாவோ னளிநீர்ப் பரப்பி
னெவ்வமுற்
றான்றன தெவ்வந் தீரெனப்
பௌவத்
தெடுத்துப் பாரமிதை முற்றவு
மறவர
சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ
றுதவும் பெற்றிய ளென்றே"
என்று - மணிமேகலை - தவத்திறம்பூண்டு
தருமங்கேட்ட காதை
(23 - 28) - யிலும் கூறியுள்ளதைக் காண்க.
சுமேதா (போதிசத்துவனும்)
தீபங்கர புத்தனும் என்ற - ஜாதக
கதையில் சுமேதா - ‘நான் புத்தனாக வேண்டில் என்ன
செய்ய
வேண்டும்" என்று யோஜித்து தானம்,
முதலாகிய பத்துப்
பாரமிதைகளை ஒவ்வொன்றாகப் பூர்ணமாகப் |