வேக முனிவன், முண்டமீரைந்தோடு - 1தசமுண்டங்களோடு,
ஒன்றி -
பொருந்தி, முனிமையில் - முனீஸ்வரத்தன்மையில், தனியனாகி
-
ஒப்பற்றவனாகி, தண் - குளிர்ச்சி பொருந்திய,
துளி -
மழைத்துளிகளையுடைய, முகிலில் - மேகத்தைப்போல, செல்லும் -
ஆகாயத்திற் செல்லும்படியான, சாரணத்தன்மை
- ஆகாச
சாரணத்தன்மையை, பெற்றான் - இவ்வித தனது தபோபலத்தால்
பெற்றான், எ-று.
(174)
735. திரிவித யோகு தாங்கித் திரிவதோர் சிகரி போல
மருவிய கொள்கை நீங்கா மாதவர் மருளச் செல்வான்
கரியர சதனைப் போலக் காஞ்சனக் குகையைச் சேர்ந்தாங்
கரியிள வேறு போல வருந்தவ னிருந்த நாளால்.
(இ-ள்.) (அவ்வாறு
பெற்றபின்), திரிவிதயோகு
-
திரிகாலயோகங்களை, தாங்கி - தரித்து, திரிவது - திரியப்பட்டதாகிய,
ஓர் - ஒரு, சிகரிபோல -
பர்வதத்தைப்போல, மருவிய -
சேர்ந்திராநின்ற, கொள்கை - சாரித்திரங்களில், நீங்கா
- நீங்காத,
மாதவர் - மஹாதபத்தையுடைய முனிவர்களெல்லாம்,
மருள -
பிரமிக்கும்படி, செல்வான் -
செல்லுகின்றவனாய், (பின்னர்),
கரியரசதனைப்போல -
ஓர் அரசயானையைப்போல,
காஞ்சனக்குகையை - காஞ்சனம் என்னும் பர்வதக்குகையில், சேர்ந்து
- அடைந்து, ஆங்கு - அவ்விடத்தில்,
அரியிளவேறுபோல -
இளமைபொருந்திய ஆண் சிம்மத்தைப்போல,
அருந்தவன் -
அரியதபத்தையுடைய கிரணவேகன், இருந்த நாள் - வசிக்கின்ற
காலத்தில், எ-று.
ஆல் - அசை. (175)
736. எரிமூழ்கி யனைய கொள்கை யசோதரை யிலங்கு வாண்மேற்
றிரிகின்ற தனைய கொள்கை சிரிதரை யோடுஞ் செம்பொன்
விரிகின்ற குகையின் பாடம் மெய்த்தவன் றன்னை வாழ்த்தி
யிரிகின்ற வினைய ராகி யிறைவன்பா லிருந்த காலை.
(இ-ள்.) எரிமூழ்கியனைய
- அக்கினியிலே முழுகினதற்குச்
சமானமாகிய, கொள்கை - சாரித்திரத்தையுடைய,
யசோதரை -
யசோதரை யென்னும் ஆரியாங்கனையும், இலங்கு - பிரகாசிக்கின்ற,
வாள்மேல் திரிகின்றதனைய - வாளாயுதத்தின்
_________________________________________
1.தசமுண்டமென்றது
பஞ்சேந்திரியங்களைத் தடுத்தல் - ஐந்து,
திரிகரணங்களைக் குப்தம் பண்ணுதல் - மூன்று, சிரோமுண்டம்
-
ஒன்று, ஹஸ்தபாதங்களை ஒரு காரியத்திலும் விடாமல்
நிற்பது -
ஒன்று, ஆகிய பத்துமாம், ஹஸ்தபாதங்களை ஒரு காரியத்திலும்
விடாததைப்பற்றிய விவரம், "பத்மநந்திபச்சிஸ்" என்னும் கிரந்தத்தில்
முதலாவது யதியா சாராதிகாரத்தில் இரண்டாவது
சுலோகத்தில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்டவங்காரங்கள் என்பதில்,
அம் -
சாரியை. (176)
|