பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 345


 

    ணீதியா னோற்று வந்தீர் நீவிரிப் பிறவி நீங்கிக்
    காதிக்க ணரிந்து வீடுங் காலத்தா லடைதி ரென்றான்.

     (இ-ள்.) தையலார்கள் - ஸ்திரீமார்கள், வையத்து - இப்பூமியில்,
ஐயராய்  வந்து  தோன்றி - புருஷர்களாகப் புண்ணியத்தினால் வந்து
பிறந்து,   மாதவந்தாங்கி   -   மஹா தபஸை மேற்கொண்டு செய்து,
ஏதமொன்றின்றி - ராகத்வே ஷாதிகளில் யாதொரு குற்றமுமில்லாமல்,
(வீதராகர்களாகி, ஸகலகர்மக்ஷயம் செய்து)  வீடும் - மோட்சத்தையும்,
எய்துவர்   -  அடைவார்கள்,    நீவிர் - நீங்களிருவரும், நீதியால் -
வரிசைக்கிரமத்தால்,  நோற்று -  விரத சீலாதி நோன்புகளை நோற்று,
வந்தீர்  -  வந்தீர்கள்,    (ஆதலின்   நீங்களும்),     காலத்தால் -
காலாந்தரத்தினால்,   காதிக்கணரிந்து   -   (புருடர்களாய்ப்  பிறந்து
தவஞ்செய்து)   காதிகர்ம க்ஷயஞ்செய்து, இப்பிறவிநீங்கி - இச்சம்ஸார
பிறப்புக்களை   விட்டு   நீங்கி  (ஸகல கர்மக்ஷயம் செய்து), வீடும் -
மோக்ஷத்தையும்,   அடைதிர்   -   அடைவீர்கள், என்றான் - என்று
சொன்னான், எ-று.                                       180

 741. தூம்பன்ன தடக்கை மாவைத் துயர்செய்து நரகம் புக்கங்
     காம்பல கடல்க ளெல்லா மவலமுற் றரிதிற் போந்து
     மேம்பட லிலாத வெல்லா விலங்கினுஞ் சுழன்று மீண்டும்
     பாம்பதாய்ப் பதலை வங்கிற் பாவிதான் பரிண மித்தான்.

     (இ-ள்.)   (இது    நிற்க    அக்காலத்தில்),     தூம்பன்ன -
உள்துளையையுடைய    தூம்புக்குச்  சமானமான, தடக்கை - பெரிய
துதிக்கையையுடைய,   மாவை   -   அசனி கோடமாகிற யானையை,
துயர்செய்து   -   குக்குட   ஸர்ப்பமாயிருந்து கடித்து அவ்வியானை
இறந்துபடும்படி   துன்பப்படுத்தி,    (பிறகு தானும் இறந்து), நரகம் -
மூன்றா நரகத்தை,  புக்கு - அடைந்து, அங்கு - அந்நரகத்தில், ஆம்
- உண்டாகிய   (தன்னாயுஷ்யகாலமாகிய),   பல கடல்களெல்லாம் -
பலவாகிய   ஏழு    கடற்கால    முழுமையும், அவலமுற்று - (நரக
வேதனையால்)    வருத்தமுற்று,   அரிதில்  -  மஹா  அருமையாக
(ஆயுரவஸாநத்து),     போந்து    -     வந்து,   மேம்படலிலாத -
மேன்மையாதலில்லாத,    எல்லா    விலங்கினும்     -      திரஸ
ஸ்தாவரங்களெல்லாவற்றிலும்,   சுழன்று   -   பரிப்ரமித்து, மீண்டு -
மறுபடியும், பாம்பதாய் - மலைப்பாம்பாக, பதலை வங்கில் - பர்வதக்
குகையில்,   பாவிதான்  -   பாபிஷ்டியாகிய சத்தியகோஷனானவன்,
பரிணமித்தான் - பிறந்தான், எ-று.                          (181)

 742. இருவரு மியம்பக் கேட்ட வறத்தின ராகிப் போகப்
     பெரியவன் குகையைச் சேரப் பிறையெயி றிலங்க வங்காந்
     தெரியெழ விழித்துக் காணா விறைவனைப் பிடித்த போழ்தி
     லருகவென் றுரைப்ப மீளா வச்சிய ரதனைக் கண்டார்.