பக்கம் எண் :


 வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 385


 

    வீர மாதவர் சூழ மெய்த்தவன்
    தார கைமதி தானு மொத்தனன்.

     (இ-ள்.) (அவ்வாறு வந்து  சேர்ந்து தங்கியபோது), மெய்த்தவன்
- உண்மையாகிய  தவத்தையுடைய வஜ்ரதந்த முனிவன், வீரமாதவர் -
ஸம்மியக்   துவ    குணவீரியத்தையுடைய   முனிவர்கள்,     சூழ -
தன்னைச்சூழ,  மால் - பெரிதாகிய, மேரு - மஹாமேரு பர்வதமானது,
(தாழ்வரையைச் சார்ந்த), பத்திராலவனத்துள் - பத்திராஸால வனத்தில்,
வாரணம்மலை    - திக்கஜ    பர்வதங்கள், சூழ   - சூழும் படியாக,
நின்றதும்   - உயர்ந்து  நடுவில்   நின்றதையும், தாரகை - நக்ஷத்திர
ஸமூகங்களின்   மத்தியில்,   (விளங்கும்), மதிதானும் - சந்திரனையும்,
ஒத்தனன்  -   ஒப்பாகிக்   குணங்களினால் மேலாகப் பிரகாசித்தான்,
எ-று.                                                   (8)

821. பிறவி மாக்கடல் பெயர்க்கு மாற்றலா
    லிறைவ னன்னவ னேந்து கொள்கையான்
    மறுவின் மாதவன் வைய மூன்றினு
    முறவி நின்றவா றோத வொன்றினான்

     (இ-ள்.)  (அவ்வாறு விளக்கியபோது), பிறவி - ஸம்ஸாராமாகிற,
மாக்கடல்   - பெரிதாகிய   ஸமுத்திரத்தை,   பெயர்க்கும் - நீக்கும்,
ஆற்றலால்   -   ஸம்மியந்துவ சக்தியினால், இறைவன் அன்னவன் -
ஸர்வஜ்ஞனை நிகர்த்தவனும்,ஏந்து - தரித்திராநின்ற, கொள்கையான் -
ஸம்மியக்    சாரித்திரத்தையுடையவனும்,    (ஆகிய),     மறுவில் -
குற்றமில்லாத,   மாதவன்    - மஹாதபத்தையுடைய  இந்த வஜ்ரதந்த
முனிவன்,   வையமூன்றினும்   -  இந்த மூன்று லோகத்திலும், உறவி
ஜீவன்கள், நின்றவாறு  -  இராநின்ற விதமாகிய திரிலோக பிரஜ்ஞப்தி
என்னும்    ஆகமத்தை,    ஓத   -   சங்கங்களுக்குச் சொல்வதற்கு,
ஒன்றினான்    - பொருந்திக்    கீழ்வருமாறு சொல்கின்றவனானான்,
எ-று.                                                   (9)

822. ஒன்றி ரண்டொரு மூன்று நாலைந்தாய்
    நின்றவைம்பொறி நெறியின் வாழுயி
    ரொன்று நீர்மர நில நெருப்பு காற்
    றென்றிக் காயமைந் தெய்தி வாழுமே.

     (இ-ள்.)   (அதாவது :-)  ஒன்று  - ஏகேந்திரியமும், இரண்டு -
த்வீந்திரியமும்,   ஒரு    மூன்று   - ஒப்பற்ற த்ரீந்திரியமும், நாலு -
சதுரிந்திரியமும்,   ஐந்து  - பஞ்சேந்திரியமும், ஆய் - ஆகி, நின்ற -
இங்கு  நின்ற, ஐம்பொறி நெறியின் - இந்தப் பஞ்சவிதமாகிய இந்திரிய
மார்க்கணைகளில்,  வாழும் - வாழ்கின்ற, உயிர் - ஜீவன்களில், ஒன்று
- ஸ்பரிசனேந்திரிய  மாத்திரமுடைய   ஏகேந்திரிய  ஜீவன்கள், நீர் -
அப்காயமும், மரம் - வனஸ்பதிகாயமும், நிலம் - பிருத்வீகாயமும்,