(இ-ள்.) முதலாம் புரையின் - முதல் நரகத்து முதல்
புரையிலிராநின்ற நாரகர்களுக்கு, உயர்வு - சரீரோத்ஸேதமானது,
முழமூன்று - மூன்று முழம், ஆம் - ஆகும், கீழ் - அம்முதல்
நரகத்துப் பதிமூன்றாவது புரையில் நாரகர்களுக்கு, முழமூன்று -
மூன்று முழமும், வில்லேழ் - ஏழுவில்லும், விரலாறு -
ஆறங்குலமுமாகிய ஏழேமுக்காலே வீசம் வில்லு, உள -
உன்னதமாகவுளதாம், இது - இந்த ஏழேமுக்காலே வீசம் வில்,
எழுவாய் - (ஏழு நரகத்துக்கும்), ஏழுதரம், ஐஞ்ஞூறு வில்லெய்தளவும்
- ஐந்நூறு வில் அடைகிற பரியந்தம், வழுவாது - தப்பாமல்,
இறுதொறும் - கீழ் கீழ்ப்புரைகள்தோறும், இரட்டியதாம் - இரட்டித்த
இரட்டித்த உன்னதங்களாகும், எ-று.
ஈறுதொறும் என்பது - இறுதொறுமென்றாயிற்று. (10)
940. புகையைந் துமுதற் புரைபுக் கவர்தா
முகையார் விழுவா ருளவா யுவெலாம்
புகையே ழொடைஞ்ஞூ றுவில்கா வதமூன்
றுகையார் விழுவார் முதலீற் றினுளார்.
(இ-ள்.) முதற்புரை புக்கவர்தாம் - முதல் நரக முதற்
புரையிலடைந்திராநின்ற நாரகர்கள், புகையைந்து - ஐந்து
யோஜனையுன்னதம், உளவாயு வெலாம் - தங்களுக்குண்டாகிய
ஆயுஷ்யநாளெல்லாம், உகையார் விழுவார் - எழும்பித்
தலைகீழாபவராய் இடைவிடாமல் விழுவார்கள், புகையேழொடு -
ஏழுயோ ஜனையோடு, ஐந்நூறுவில் - ஐந்நூறு வில்லு காவத மூன்று -
மூன்றுகாதமுமாகிய இந்த ஏழேமுக்காலே வீசம் யோஜனை உயரம்,
முதலீற்றினுளார் - அம்முதல் நரகத்துப் பதின்மூன்றாவது புரையிலுள்ள
நாரகர்கள், உகையார் விழுவார் - எழும்பித் தலை கீழாபவராய் நரக
பூமியில் விழுவார்கள், எ-று. (11)
941. எழுவா யதிரட் டியிரட் டியதாய்
வழுவா திறுவாய் புரைதோ றும்வரா
வெழுதா நரகத் தியல்பா யவைஞ் ஞூ
றொழியா துவிழுந் தெழுமோ சனையே.
(இ-ள்.) எழுவாய் - ஏழுதரம், அது - அந்த ஏழேமுக்காலே
வீசம் யோஜனை, இரட்டியிரட்டியதாய் - இரட்டித்த இரட்டித்ததாகி,
வழுவாது - தப்பாமல், இறுவாய்புரைதோறும் - கீழ்கீழ்புரைகள்
தோறும், வரா - வந்து, எழுதாநரகத்து - ஏழாநரகத்தில், (உள்ள
நாரகன்), இயல்பாய - ஸ்வபாவமாகிய, ஐஞ்ஞூறு யோசனை - ஐந்நூறு
யோசனை உன்னதம், ஒழியாது - இடைவிடாமல் விழுந்தெழும் -
எழும்பித் தலைக்கீழாக விழுவான், எ-று.
‘எழுதாம்" என்பதில், தாம் - அசை. (12) |