பக்கம் எண் :


458மேருமந்தர புராணம்  


 

ளென்கிற,  குலமலை  -   குலபர்வதங்களுக்கு, விளக்கை ஒத்தான் -
தீபத்தைப் போல பிரகாசியாநின்றான், எ-று.                   (2)

972. வினையத்தின் முனிவ னொத்து விஞ்சையின் வளர்ந்த வீர
    னினைவொத்துத் தீய வேந்தர் நிலைகெடுத் தரசு மேவிக்
    கணமொத்தெவ் வுயிர்க்கு மீந்து கமலப்பூந் தடத்து வெய்யோன்
    றனையொத்து மரைமு கத்தார் தம்முலைத் தொய்யிற் பட்டான்.

     (இ-ள்.)  (அங்ஙனம்),  வினையத்தின்   -   வணக்கத்தினால்,
முனிவனொத்து     -      முனிவரனைப்போல,     விஞ்சையின் -
அரசர்களுக்குரிய வித்தைகளோடு, வளர்ந்த - வளர்ச்சியடைந்த, வீரன்
- வீரனாகிய    அக்குமாரன்,   நினை   வொத்து - தனது எண்ணம்
நன்மார்க்கத்திற்  பொருந்தி,   தீயவேந்தர் - சத்துரு ராஜாக்களுடைய,
நிலை   -   நிலைமையை,  கெடுத்து - போக்கி, அரசு - ராஜ்யத்தை,
மேவி   - பொருந்தி,    கணமொத்து - மேகமானது   கைம்மாறின்றி
மழையை வருஷிப்பதுபோல, எவ்வுயிர்க்கும் - ஸகலர்களுக்கும், ஈந்து
- தியாகம்   கொடுத்து,   கமலப்   பூந்தடத்து  - அழகிய தாமரைத்
தடாகத்துக்கு,    (நேராகவிளங்கும்),  வெய்யோன்றனை   யொத்து -
சூர்யனை   நிகர்த்து, (அதாவது :  சூரியன்   தாமரைத் தடாகத்துக்கு
நன்மை   செய்து   விளங்குவதுபோல), மரைமுகத்தார் தம் - தாமரை
மலர்போன்ற   முகமுடைய   தேவிமார்களின், தொய்யில் - சாந்தால்
எழுதிய   இடுகொடிகளையுடைய,   முலை   -   ஸ்தனங்களினாலே
யுண்டாகின்ற காமபோகத்தில், பட்டான் - அடைந்தான், எ-று.     (3)

973. அழலிடை வந்த மைந்த னவ்வழ றணியு மெல்லை
     நிழலிடை யிருப்ப தேபோ னிரையத்துத் துயரந் தீரக்
     குழலன மொழியி னார்தங் குவிமுலைத் தடத்து வைகிப்
     பழவினை துணிக்க நின்ற பான்மைவந் துதித்த நாளால்.

     (இ-ள்.) அழலிடை  - ஆதபத்தினின்றும், வந்த - நீங்கி வந்த,
மைந்தன்     -   புருஷனானவன்,   அவ்வழல்     - அவ்வாதபம்,
தணியுமெல்லை   - நீங்கும்    பரியந்தம்,   நிழலிடை -   நிழலிலே,
இருப்பதேபோல்  - இருப்பது போல, (இந்த ஸ்ரீ தாமரவாகிய அரசன்),
நிரையத்துத் துயரம் - பூர்வத்தில் நரகத்தில் அனுபவித்த துக்கமானது,
தீர    -    நீங்கும்படி, குழலன - புள்ளாங்குழலிசைக்குச் சமானமாகி
இனிமை    பொருந்திய, மொழியினார்    தம்   - வசனத்தையுடைய,
தேவிமார்களின்,    குவி    -    திரட்சி    பொருந்திய,   முலை -
ஸ்தனங்களையுடைய,   தடத்து    -    மார்பினிடத்து,     வைகி -
காமராகத்தினால்   தங்கி,   பழவினை  -  பூர்வத்திலிருந்துண்டாகிய
வினைகள்,   துணிக்க - கெடும்படி, நின்ற - நின்றதாகிய, பான்மை -
குணமானது,    வந்து -   அடைந்து, உதித்த   நாள்  - உதயத்தைக்
கொடுத்த காலத்தில், எ-று.

     ஆல் - ஈற்றசை.                                    (4)