பாவத்தில், ஒன்றுமின்றி - சிறிதுமில்லாமல், வேந்தனும் -
ஸிம்மஸேனனென்னும் அரசனும், வீட்டில் - என்றும் நிங்குதலில்லாத,
இன்பபாரத்தை - அனந்த ஸௌக்கியமாகிய சுத்த
ஸ்வாத்மோத்தலாபத்தை, முடிய - முழுதிலும், (அதாவது : அனந்த
ஞானாதி ஸகல குணங்களையும்), சென்றான் - (திரவிய, க்ஷேத்திர,
கால பாவ நியதத்தால்) அடைந்தான், என்றான் - என்று சொன்னான்,
எ-று. (16)
986. மந்திரி நாகம் மான மாப்பின்வா ரணத்தி னாகம்
வெந்தெரி நரகன் மிக்க மாசுணம் நரகன் வேடன்
அந்தமா நரகன் னாக மாரழ னரகன் மற்றும்
மைந்தன்சங் கிக்கு வித்துத் தந்தன்றன் வரவி தாமே.
(இ-ள்.) (பின்னரும்), மந்திரி - ஸ்ரீபூதி மந்திரியானவன், பின் -
பின்பு, நரகம் - அகந்தன ஸர்ப்பமாகி, (அதன் பின்பு), மானமா -
சமரீமிருகமாகி, (அதன் பிறகு),வாரணத்தினாகம் - கோழிப் பாம்பாகி,
(பின்னை), வெந்தெரி - மிகவும் வெந்தெரிகின்ற, நரகன் - மூன்றாவது
நரகனாகி, (பிறகு), மிக்கமாசுணம் - உருவத்தில் மிகுந்த
மலைப்பாம்பாகி, (பின்பு),நரகன் - நாலாவது நரகனாய், (அதன் மேல்),
வேடன் -(அங்கு நின்று நீங்கி) வேடனாகி, (பின்பு) அந்தமாநாரகன் -
கடைசியாகிய ஏழாநரகனாய், (ஆயுரவஸானத்து), நாகம் -
பாம்பாகியிறந்து (பின்பு), ஆர் அழல் - நிறைந்த அக்கினி
சொரூபமாகிய, நரகன் - மூன்றா நரகனாகி, மற்றும் - பின்னையும்,
சங்கிக்கு மைந்தன் - சங்கியென்னும் தாபஸஸ்த்ரீக்குப் புதல்வனாகி,
(பிறகு), வித்துத் தந்தன் - வித்தியுத்தம்ஷ்ட்ரன் என்பவனானான், தன்
- இவனுடைய, வரவு - பிறப்பின் வருகையானது, இதாம் - இப்போது
சொல்லப்பட்ட வரிசையாகும், எ-று. (17)
987. மன்னவன் மத்த யானை சாசாரன் விஞ்சை வேந்தன்
பின்னைகா விட்ட தேவன் பெரியவச் சிராயு தன்பின்
பன்னருந் தவத்திற் பஞ்சா ணுத்தரத் தமரன் பார்மேல்
மன்னிய புகழி னான்சஞ் சயந்தன்றன் வரவி தாமே.
(இ-ள்.) மன்னவன்- ஸிம்மஸேன மஹாராஜன், மத்த யானை -
(அடுத்த பிறப்பில்), மதயானையாகி, (பின்னர் , விரதானுஷ்டான
பாவனையால்), சாசாரன் - ஸஹஸ்ரார கல்பத்து தேவனாகி, (பின்பு),
விஞ்சை வேந்தன் - (கிரண வேகனென்னும்) வித்தியாதர வரசனாகி,
பின்னை - மறுபவத்தில், காவிட்டதேவன் - காபிஷ்ட கல்பத்து
தேவனாகி, (அதன் பின்), பெரிய - உயர்ந்த, வச்சிராயுதன் -
வஜ்ராயுதனென்னும் அரசனாகி, பின் - அப்பவத்தின் பிற்காலத்தில்,
பன்னரும் - சொல்லுதற்கரிய, தவத்தில் - ஜினதீக்ஷ பிராப்த
தபஸினால், பஞ்சாணுத்தரத் தமரன் - பஞ்சாணுத்தரத்தில் அஹமிந்திர
தேவனாகி, (அதன்பின்), பார்மேல் - |