(இ-ள்.) (அதன் மேல்), மாதக்கபோதத்து - பெருமை
பொருந்திய ஸம்மியக்ஞானத்தையுடைய, ஆதித்தாபனும் -
ஆதித்யாபதேவனும், விஞ்சைவேந்தன் - வித்தியாதரசனாகிய
வித்யுத்தம்ஷ்ட்ரனுடைய, வோம் - குரோதபரிணாமமானது,
விடத்தக்கதென்று - விட்டு நீங்கத்தக்கதென்று, (கருதி), மிக்க -
மிகுதியாகிய,கோபத்தை - அவனுடைய குரோதத்தை, உபசமிப்பித்து -
உபசமம் பண்ணுவித்து, அருளினை - தயவை, கொண்டு
மனதிற்கொண்டு, மேதக்கது - மேன்மை பொருந்தியதாகிய தரும
நீதியை, அருள - அவனுக்குச் சொல்லி யருள, (அதனால்), நிற்கும் -
அங்கே நிற்கின்ற, நோதக்க - வருத்தந்தங்கிய, நீதி உள்ளான் -
முன்னே நீதியை நினைக்காதவனாகிய அவ்வித்துத் தந்தன்,
நுவலுதற்கு - அத்தேவன் சொல்வதற்கு, (அதாவது :
அதனைக் கேட்பதற்கு), உள்ளம் வைத்தான் - மனம் பொருந்தினான்,
எ-று. (33)
1003. மதகரி மசகம் போல்வார் வசம்வரல் வைய மூன்றிற்
கதிபதி யாகு மாகா விதிவசம் வருத லொன்று
மதிபெரி துடைய நீரார் மாற்றிடை யின்ப மேவார்
விதியற வெறிய வெண்ணும் விஞ்சையால் விஞ்சை வேந்தே.
(இ-ள்.)(அவ்வாறு நீதி கூறத்தொடங்கிய ஆதித்தியாபதேவன்
அவனை நோக்கி), விஞ்சை வேந்தே - வித்தியாதர வரசனே!,
மசகம்போல்வார் - அற்ப சரீரமுடைய கொசுப்போல மிகவும் தாழ்ந்த
சரீர பரிமாணத்தையும் தாழ்ந்த ஆயுஷ்யத்தையு முடையவர்களாகிய
மனுஷ்யர்களுக்கு, (ஞான சக்தியாலும் மனோ முயற்சியாலும்), மதகரி -
மதம்பொருந்திய யானையும், வசம் வரல் - ஏவல்கேட்டு
வசமாகின்றது, ஆகாவிதிவசம்வருதல் - (அம்மதகரிக்கு) கெட்ட
விதிவசத்தால் வருவதாகும், மசகம்போல்வார் - கொசுகைப்போல்
அற்பமானவர்கள், (க்ஷாயிக பாவ ஸம்மியக்ஞான சக்தியுற்று சுத்த
ஸ்திதியில் நிற்றலாகிய ஸ்வசாரித்திர வசம் பெற்று), வைய மூன்றிற்கு -
இம் மூவுலகத்துக்கும், அதிபதி - ஆதிபத்யமாகிய ஈஸ்வரத்தன்மை
யடைவது, ஆகும் விதிவசம் வருதல் - நல்ல விதிவசத்தால்
வருவதாகும், (ஆதலால்), ஒன்றும் - பொருந்திய, மதிபெரிதுடையநீரார்
- ஸம்மியக் ஞானோத்கிருஷ்மாகிய, குணமுடையவர்கள், விதியற -
பாவகர்ம திரவியகர்ம நோகர்மங்கள் முழுமையையும், எறிய -
சேதித்து நீக்கும்படியாக, எண்ணும் - கருதுகின்ற, விஞ்சையால் -
தங்களுடைய சுருத ஞானபலத்தால், (அங்ஙனம் விதியறவெறிய
வெண்ணாமல்), மாற்றிடை - இச்சமுசாரத்திலாகிய, இன்பம் -
இந்திரியவிஷய சுகத்தை, மேவார் - பொருந்த விரும்பமாட்டார்கள்,
எ-று.
‘மசகம் போல்வார்" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (34)
1004. கோபத்தீக் குடைய வோடி நரகத்தைக் குறுகிப் பல்கால்
வேபத்தின் வெதும்பி நின்றெவ் விலங்கினுஞ் சுழன்று வந்தாய் |