பக்கம் எண் :


 ஸ்ரீ விஹாரச்சருக்கம் 489


 

     (இ-ள்.)  செங்கமலமொன்று - ஒரு செந்தாமரைப் பூவின் மேல்,
இரண்டு பங்கயம் - இரண்டு செந்தாமரைப் புஷ்பங்கள், மலர்ந்தென -
புஷ்பித்தது   போல,   அம்   -  அழகிய, கமலத்து - தேவர்களால்
நிருமித்த    செந்தாமரைப்    புஷ்பத்தின்    மேலே,    அறிவன் -
அதீந்திரியஞான ஸ்வரூபியாகிய விமல தீர்த்தங்கர ஜீநேந்திரன், திரு -
அழகிய,   அடியிணை    -    இருபாதங்களையும்  வைத்தளவில் -
வைத்தகாலத்தில்,   திங்களன   -   சந்திரன்போல பிரகாசியா நின்ற,
குடைமும்மையும்     -   வெண்சத்திரத்திரயமும்,    மண்டலமும் -
பிரபாமண்டலமும்,  பொங்கிய - பெரிதாகிய, வெண் - வெளுப்பாகிய,
சாய்மரைகள்  - யக்ஷகுமாரரால் வீசுகின்ற சாய்மரைகளும், செறிந்த -
சேர்ந்தன,   பூமழைகள்     -  புஷ்ப வருஷங்களை, பொழிந்தார் -
தேவர்கள் சொரிந்தார்கள், எ-று.                            (24)

 1035. மாதவர்கண் மலரடி பணிந்துபி னெழுந்தார்
      சோதமனோ டெண்மையுல காந்தர்தொழு தேத்தி
      நாதனெதிர் வைத்தமுக ராகிமுன் னடந்தார்
      காதிகெட வந்ததிரு வோடுசசி சென்றாள்.

     (இ-ள்.)  மாதவர்கள் - மஹாதபஸைச் செய்கின்ற முனிவரர்கள்,
மலரடி  - பகவானுடைய, செந்தாமரைப் புஷ்பம் போன்ற பாதங்களை,
பணிந்து  -  வணங்கி,  பின்  -  பின்னாலே,   எழுந்தார் - எழுந்து
சென்றார்கள்,  சோதமனோடு  - ஸௌதர் மேந்திரனோடு, எண்மை -
எட்டுப்   பிரகாரமாகிய,  உலகாந்தியர்  - லௌகாந்திக தேவர்களும்,
தொழுது  -  வணங்கி,   ஏத்தி  -  ஸ்தோத்திரஞ்  செய்து, நாதன் -
ஜினேந்திரனுடைய,  எதிர் வைத்த - எதிரிலே வைக்கப்பட்ட, முகராகி
- முகத்தையுடையவர்களாகி,   முன்    -   முன்னாலே, நடந்தார் -
சென்றார்கள், காதிகெட - காத கர்மமானது நீங்க, வந்த - வரப்பட்ட,
திருவோடு   -   புண்ணியமாகிய லக்ஷ்மியோடு, சசி - மஹாதேவியும்,
சென்றாள் - அடைந்தாள், எ-று.                            (25)

 1036. பூரசல சம்முதலெண் மங்கலங்க ளேந்தி
      வேரிமலர் மடந்தையொடு மேவின ரெழுந்தார்
      காரின்மணி கனகம்பொழி யாக்கமலஞ் சங்கன்
      பேருடைய நிதிக்கரசர் பின்னைமுன் னெழுந்தார்.

     (இ-ள்.)   பூரகலசம்  முதல  -  பூர்ணகும்பம்  முதலாக, எண்
மங்கலங்கள்  -  அஷ்டமங்கலங்களை,  ஏந்தி  -  தரித்து,  வேரி -
வாசனை   பொருந்திய,   மலர்   -   தாமரைப்   புஷ்பத்தின் மேல்
வஸிக்கின்ற,    மடந்தையொடு     -     லக்ஷ்மிதேவியுடன்,   (சில
தேவவனிதைகள்),    மேவினர்  - பொருந்தினவர்களாகி, எழுந்தார் -
வந்தார்கள், காரின் - மேகமானது மழையைச் சொரிவதுபோல, மணி -
இரத்தினங்களையும்,    கனகம்   -  ஸ்வர்ணங்களையும், பொழியா -
சொரிந்து, கமலம் - பத்மமும்,