பக்கம் எண் :


494மேருமந்தர புராணம்  


 

     மிந்திர நீலச் செப்பு மகிற்புகைப் புகைத்த வேந்தி
     மைந்தரைச் சூழ்ந்து நின்றார் மயிற்குழாம் போல வந்தே.

     (இ-ள்.)  சந்தனக்குழம்பின்  -  சந்தனக்குழம்பினால், ஆர்ந்த -
நிறைந்த,   சந்திரகாந்தச்  செப்பும்   -   சந்திரகாந்தச் செப்புகளும்,
குங்குமக்  குழம்புவிம்மும்   -   குங்குமக்குழம்பு  நிறைந்திருக்கின்ற,
இரவியின்  குழவிச்  செப்பும் - சூரியகாந்தச்  செப்பும், அகிற்புகை -
அகிற்றூபங்களை, புகைத்த  -  புகைத்துக்கொண்டிருக்கின்ற,  இந்திர
நீலச்செப்பும்   -   இந்திர     நீல     ரத்தினத்தினால்     செய்த
தூபகலசங்களையும், ஏந்தி - தரித்து, மயிற்குழாம்போல வந்த - மயில்
கூட்டங்களைப்போல்  வந்து,   மைந்தரை  -  இந்தக்  குமாரர்களை,
சூழ்ந்து - எப்பக்கமுஞ்  சூழ்ந்துகொண்டு,  நின்றார் - (பரிசாரகர்கள்)
நின்றார்கள், எ-று.                                       (36)

 1047. விசும்புற விரிந்து நாறும் விரைமர் மாலை பெய்து
      பசும்பொனும் மணியும் மின்னும் படலிகை பலவு மேந்தி
      யசும்பறாக் கடாத்த வேழத் தரசிளங் குமரர் வந்தார்
      விசும்பின்மேல் வினையுற் பாத மருக்கர்தா மிருவ ரொத்தார்.

     (இ-ள்.)  விசும்புற  -  ஆகாயமெங்கும்  பொருந்த,  விரிந்து -
விசாலித்து,   விரை  நாறும்  -  வாசனை  வீசுகின்ற, மலர் மாலை -
புஷ்பமாலை முதலியவைகளை, பெய்து - வைத்து,  பசும் பொன்னும் -
பசுமை      பொருந்திய       ஸ்வர்ணத்தினாலும்,      மணியும் -
இரத்தினங்களினாலும், மின்னும் - பிரகாசியாநின்ற, படலிகை பலவும் -
அனேகமாகிய   தட்டுக்களை,   ஏந்தி - தரித்து, அசும்பறா - ஊற்று
நீங்காத,   கடாத்த   -  மதஜலத்தையுடைய, வேழத்து - யானையின்
மேலே,   வந்தார்   -   வந்தவர்களாகிய,   அரசளிங்குமரர் - மேரு
மந்தரரென்கிற    இரண்டு     ராஜகுமாரர்களும்,  விசும்பின்மேல் -
ஆகாயத்தின்   மேலே,  வினையுற் பாதம் - உத்பாத காரியத்தாலான,
அருக்கர்தா  மிருவரொத்தார் - இரண்டு சூர்யர்களுக்கொப்பானார்கள்,
எ-று.

பன்னிரண்டாவது :

ஸ்ரீ விஹாரச்சருக்கம் முற்றிற்று.

____