சமானமாகிய, கைதொழுது
- தங்களுடைய கைகளை முகுளிதஞ்
செய்து, இறைஞ்சி - வணங்கி,வாழ்த்தி - ஸ்தோத்திரம் பண்ணி,
கோசம்போய் - அங்கு நின்று ஒரு குரோச தூரம் போய்,
ஊனந்தீர்
- குற்றம் நீங்கி லட்சணமமைந்த,
தூயத்தானாங்கணம் -
பரிசுத்தமாகிய அந்த ப்ராஸாத சைத்ய பூமியின் நடுவில், புக்கார் -
அடைந்தார்கள், எ-று. (2)
1050. ஆங்கத னகத்து வீதி நடுவணாற் காத மோங்கிப்
பாங்கின்மா திசையிற் பன்னீ ரோசனை காண நின்ற
வாங்குகாந் தம்போல் மானம் வாங்குநன் மானத் தம்பம்
பாங்கினாற் றோர ணம்வே திமங்கலம் பலவுஞ் சூழ்ந்த.
(இ-ள்.)
ஆங்கதன் - அவ்விடத்தே அந்த சைத்ய
ப்ராஸாத
பூமியினுடைய, அகத்து - மத்தியிலும்,
வீதி - வீதிகளினுடைய,
நடுவண் - நடுவிலும், (இராநின்றனவாகி),
நாற்காதமோங்கி -
நாலுகாதம் உன்னதத்தையுடையதாகி, பாங்கின் -
வரிசைக்கிரமத்தால்,
மாதிசையில் - மஹா திக்குகளில், பன்னீரோசனை -
பன்னிரண்டு
யோஜனை தூரம், காண - அளவிற்காணும்படி, நின்ற -
ஒவ்வொரு
மஹா திக்கில் ஒவ்வொன்றாகி நின்ற,
வாங்கும் - இரும்பைத்
தன்னிடம் வாங்கிக்
கொள்ளும்படியான, காந்தம்போல -
காந்தத்தைப்போல, மானம்
- பார்க்கின்றவர்களுடைய மான
கர்மத்தை, வாங்கும் - வாங்கிக்கொள்ளும்படியான, நல் - அழகாகிய,
மானத்தம்பம் - மானஸ்தம்பங்களை, பாங்கினால் -
வரிசையினாலே,
தோரணம் - தோரணங்களும், வேதி - மதில்களும், மங்கலம் பலவும்
- அஷ்டமங்கலங்களும், சூழ்ந்த - சூழ்ந்திரா நின்றன,
எ-று. (3)
1051. வயிரநற் படிகம் வயிடூ ரியமடி நடுவ ணுச்சி
யுயரத்தின் பாக மோக்கம் படிகமேற் கீழ வோக்கம்
வெயில்விடு தாரைக் கீழ்மே லாயிரம் நடுவி ரட்டித்
துயரினைக் கெடுக்குஞ் சித்தப் படிமைநாற் றிசையு மாமே.
(இ-ள்.) அடி - அந்தமான ஸ்தம்பத்தின் அடியில், வயிரம் -
வஜ்ரரத்தினமும், நடுவண் - மத்தியில், நல் - நன்மையாகிய,
படிகம் -ஸ்படிகரத்தினமும், உச்சி -
மேலே, வயிடூரியம் -
வைடூரியரத்தினமுமாகி, உயரத்தில்
- மொத்த உன்னதத்தில்,
பாகமோக்கம் - பாதிநீளம் (அதாவது : நடுவில் இரண்டு காதநீளம்), படிகம் -
ஸ்படிகரத்தினமும், மேல் கீழவோக்கம்
- மேலே ஒரு
காதநீளம் வைடூரியமும் கீழே ஒரு காதநீளம் வஜ்ரரத்தின மயமுமாகி,
கீழ் - கீழிலாகிய வஜ்ரரத்தின ஸதம்பமும்,
மேல் - மேலேயாகிய
வைடூரியரத்தின ஸ்தம்பத்திலும்,
வெயில் விடு - கிரணத்தை
வீசுகின்ற, தாரை - பட்டைகளானவை, ஆயிரம் - ஆயிரமாகி, நடுவு
- மத்தியில் இரண்டு காதநீளமான
ஸ்படிகத்தில், இரட்டி -
இரண்டாயிரம்
|