பக்கம் எண் :


504மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   ஆடகத்து    -   ஸ்வர்ணத்தினால்,      இயன்று -
செய்யப்பட்டதாகி,  வீதியின் -  அந்த  வன பூமியினுடைய, திக்கு -
மஹா வீதிகளின்,  இருமருங்கும்  - இரண்டு பக்கங்களிலும், இரண்டு
கோபுரத்தளவுஞ்    சென்ற   -    உதயதர   கோபுரப்   பியந்தர
பாகத்திலிருந்து ப்ரீதிதர கோபுரம்வரையில் செல்லப்பட்டதாகி, மூன்று
நிலையினால் -  மூன்று  நிலைகளால்,  எட்டுப்பந்தி  -  ஒவ்வொரு
நிலையிலும்      எட்டெட்டுப்       பந்தியாய்       (அதாவது :
ரங்கங்களையுடையதாகி),  ஊடு  சென்று  -  அதனுள்ளே   சென்று,
சோதிடர்   தேவிமார்கள்    -    ஜோதிஷ்கத்    தேவர்களுடைய
தேவியர்களாகிய,  நல்லார்  - ஸ்த்ரீமார்கள், வீடில - கெடுதலில்லாத,
பலவும் - பலப்பிரகாரமான  நர்த்தனங்களை,  ஆடும்  - ஆடுகின்ற,
நாடகசாலை - நர்த்தனசாலைகள், நின்ற - இராநின்றன, எ-று.(19)

 1067. பைம்பொனும் மணியி னாலும் குயின்றவே பாத வாதிச்
      செம்பொன்மங் கலங்கள் வேதி தோரணஞ் செறிந்த யாவு
      மும்பர்தம் முலகும் போக பூமியு மொன்றி னாற்போல
      வம்பணி முலையி னாரு மைந்தரு மலிந்த வெங்கும்.

    (இ-ள்.)    பைம்  -   பசுமைபொருந்திய,    மணியினாலும் -
இரத்தினங்களினாலும்,  குயின்ற  -   நிருமித்திராநின்ற,  பாதவாதி -
கற்பகவிருட்ச  முதலான,  யாவும் - (சைத்யவிருட்சம்,   ஸ்தூபைகள்)
இவைகளையெல்லாம்,   செம்  - சிவந்த, பொன் - பொன்னாலாகிய,
மங்கலங்கள் -   அஷ்ட   மங்கலங்களும்,  வேதி  -  மதில்களும்,
தோரணம் - துவார  தோரணங்களும்,  செறிந்த - சேர்ந்திராநின்றன,
எங்கும் - அவ்வனபூமியில்  எவ்விடங்களிலும், உம்பர்தம் முலகும் -
தேவருலகமும், போகபூமியும் -  போக பூமியும், ஒன்றினாற் போல் -
வந்து பொருந்தினது  போல,  வம்பணி  -  இரவிக்கையை யணிந்த,
முலையினாரும் -  ஸ்தனங்களையுடைய தேவ ஸ்த்ரீயர் கூட்டங்களும்
மனுஷ்ய    ஸ்த்ரீ   கூட்டங்களும்,   மைந்தரும் -    தேவகுமாரர்
கூட்டங்களும் மனுஷ்யர் கூட்டங்களும், மலிந்த - நிறைந்திராநின்றன,
எ-று. (20)

 1068. குயிலிசை முழவ மாகக் கொம்பின்மேற்றும்பி பாட
      மயில்நடம் பயிலு மெங்கும் வானவர் மடந்தை நல்லார்
      புயலியன் மின்னுப் போலச் சோலைவாய்ப் பொலிந்து
                                              தோன்றிக்
      கயல்விழி பிறழக் காமங் கனியநின் றாடி னாரே.

   (இ-ள்.)  எங்கும்  - இன்னும் அவ்வனபூமியி லெவ்விடங்களிலும்,
குயில் -  குயில்கள்  கூவுகின்ற,  இசை - ஓசையானது, முழவமாக -
மத்தளமாக,  கொம்பின்மேல்  -   பூங்கொத்துக்களின்மே லிராநின்ற,
தும்பி -  தும்பிக்கூட்டங்கள்,  பாட -  சங்கீதம்போலப்பாட, மயில் -
மயில்களானவை,  நடம்பயிலும்  -  நர்த்தனஞ் செய்வதுபோல் சிறகு
விரித்தாடா நிற்கும், வானவர் மடந்தை நல்லார் - தேவ குமாரியர்கள்,
புயலியல் - மேகத்திற் றோன்றுகின்ற, மின்னுப்போல் - மின்னற்