எங்களுக்கு, அவை - அந்த ஞானங்கள், அனேகம் - (மதியாதியாக
உள்பேதம்) அநேகமாம், பிறவி - ஸம்ஸாரப்பிறப்பு, நீ - உனக்கு,
இலை - கிடையாது, யாங்களோ - நாங்களோ, பிறவியில் -
அப்பிறப்புக்களினால், பெரியோம் - மிகுந்தவர் களா யிராநின்றோம்,
செறிவது - இனிச் சேரும்படியான, ஓர் - ஒப்பற்ற, கதி - கதியானது,
உனக்கு - உனக்கு, இலை - கிடையாது, எமக்கு - எங்களுக்கு,
நான்கு - நாலுகதிகள் இரா நின்றன, இவற்றால் -
இவைகளாலெல்லாம், (பார்க்குமிடத்தில்) நீ-, வறியை -
வறுமையையுடையாய்; (அப்படியிருந்தும் இத்தகைய நீ) எம்மை -
(மேலாகிய) எம்மை, ஆட்கொண்ட - அடிமையாகக் கொண்டருளிய,
வசியிது - வசியமாகிய இது, பெரிது - பெருமையையுடையது,
எ-று.
(131)
132. என்று வானவ ரிறைவனை யிறைஞ்சுமப் பொழுதே
யன்று மூவுல கத்துள வமரரும் வியப்ப
நின்ற தோர்படி நிருமியா வரிவையர் சூழச்
சென்ற னன்றர ணேந்திரன் சிறப்பொடும் விரைந்தே.
(இ-ள்.) என்று - என்றுசொல்லி, வானவர் - தேவர்கள்,
இறைவனை - வைஜயந்த பகவானை, இறைஞ்சுமப்பொழுது -
வணங்குகின்ற அச்சமயத்தில், மூவுலகத்துள்ள - மூன்று
லோகத்திலுமுள்ள, அமரரும் - தேவர்களும், வியப்ப -
ஆச்சரியமடையும்படியாக, நின்றது - நிலைபெற்றதாகிய, ஓர் -
ஒப்பற்ற,படி - உருவத்தை, நிருமியா - நிர்மாணம் பண்ணிக்கொண்டு,
அரிவையர் - தேவிமார்கள், சூழ - சூழும்படியாக, தரணேந்திரன் -
(பவணலோகத்துக் கதிபதியான) தரணேந்திரனென்பான், சிறப்பொடு -
பூஜாதிரவியத்தோடு, விரைந்து - சீக்கிரமாக, அன்று -அப்பொழுது,
சென்றனன் - அவ்விடம் வந்தடைந்தான், எ-று. (132)
வேறு.
133. நிழலுமிழ்ந் திலங்கு மேனி நிறைமதி முகமுஞ் செம்பொற்
கழலணிந் திலங்கும் பாதங் கமலங்கள் காம னேயுங்
குழலணிந் திலங்கு நல்லார் வடிவினாற் குழைய வாங்குந்
தழலுறுந் தன்மைத் தந்தத் தரணன துருவு தானே.
(இ-ள்.) காமன்ஏயும் - மன்மதனைநிகர்த்த, அந்தத் தரணனது
- அந்தத் தரணேந்திரனுடைய, மேனி - சரீரம், நிழல் - பிரகாசத்தை,
உமிழ்ந்து - சொரிந்து, இலங்கும் - விளங்கும், முகமும் -
முகமானதும், நிறைமதி - ஸம்பூர்ணச் சந்திரனுக்குச் சமானமாகும்,
செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய, கழல் - வீரகண்டயத்தை,
அணிந்து - தரித்து, இலங்கும் - விளங்கும், பாதம் - பாதங்கள்,
கமலங்கள் - தாமரைப் புஷ்பத்திற்குச் சமமாகும், உருவு - (இந்த
அவயவங்கள் சேர்ந்த அவனது) உருவமானது, குழல் -
அளகபாரத்தை, அணிந்து - சீவி முடித்து
|