யிலும், அருள் - தயவு, உம்மில் - உங்கள் முன்னோர்களால்,
பெற்றுவந்த - அடைந்து வந்த, அந்த வினமிதன் குலத்தில் - அந்த
வினமி வம்சத்திலே, மின் திகழ்தந்தன் -மின்னலைப்போல்
பிரகாசியாநின்ற பற்களையுடைய இவ்வித்துத்தந்தன், உள்ளான் -
உண்டானவனா யிராநின்றான், எ-று. (64)
205. நஞ்சுடை மரத்தை யேனு நட்டுநீ ரட்டி யாக்கி
விஞ்சிய வதனைத் தாமே வீட்டுத லரிதி யார்க்கு
மென்பதிவ் வுலகி னின்ற தறிதியே நீவிர் நட்ட
விஞ்சையர் குலத்து மேனீ வெகுள்வதென் விடுக வென்றான்.
(இ-ள்.) நஞ்சுடை - விஷத்தையுடைய, மரத்தையேனும் -
மரத்தையானாலும், நட்டு - ஸ்தாபித்து, நீர் - ஜலத்தை, அட்டியாக்கி -
மிகவிட்டு, விஞ்சியவதனை - மிஞ்சிவளர்ந்த அதை, தாமே -
தாங்களே, வீட்டுதல் - போக்கடித்தல் (அதாவது : வெட்டிப்போடுதல்),
யார்க்கும் - எவ்வகைப் பட்டவர்க்கும், அரிது - கூடாது, என்பது -
என்கிற பழமொழி, இவ்வுலகின் - இவ்வுலகத்தில், நின்றது -
நிலைபெற்றிருப்பதை, அறிதி - நீ அறிவாயாக, (இஃதிப்படியிருந்தும்),
நீவிர் - நீங்கள், நட்ட - ஸ்தாபித்த, விஞ்சையர் குலத்துமேல் -
வித்தியாதர குலத்தின்பேரில், நீ - நீ,வெகுள்வது - கோபிப்பது, என் -
என்ன?, விடுக - (இதனை) விடக்கடவாய், என்றான் - என்று
ஆதித்யாபதேவன் சொன்னான், எ-று. (65)
206. வினையற வெறிந்த வீரன் விதேகத்து வீத சோகந்
தனையுடை வைசயந்தன் றன்மக னென்முன் றன்மைக்
கினையவ னெவர்க்கு மேத மதத்தினு நினைத்தி டாதான்
றனையிவை செய்தான் யாவ னாயினுந் தடிவன் கண்டாய்.
(இ-ள்.) வினை - கருமங்களை, அற - (முழுதும்) நீங்க, எறிந்த
- கெடுத்த, வீரன் - வீரனாகிய இச்சஞ்சயந்த பட்டாரகன், விதேகத்து
- விதேக க்ஷேத்திரத்து, வீதசோகந்தனையுடை -
வீதசோகபுரத்ததிபதியான, வைசயந்தன் தன் - வைஜயந்த
மகாராஜனுடைய, மகன் - குமாரனாகிய, என்முன் - எனது
தமையனாகும், தன்மைக்கு - ஸ்வபாவத்தன்மை அடைவதற்கு,
இனையவன் - இப்படிப் பொருந்திய தபஞ்செய்யப்பட்டவன்,
எவர்க்கும் - எவர்களுக்கும், ஏதம் - பொல்லாங்குகளை, மனத்தினும்
- மனத்தினாலும், நினைத்திடாதான் தனை - எண்ணாதவனாகிய
இவனுக்கு, இவை - இந்த உபசருக்கங்களை, செய்தான் - செய்தவன்,
யாவனாயினும் - எவனாயிருந்தபோதிலும், தடிவன் - யான் சிக்ஷைசெய்வேன், (என்று தரணேந்திரன் சொன்னான்.) எ- று.
கண்டாய் - அசை. (66) |