பக்கம் எண் :

பக்கம் எண் :44

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை

"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். 1"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" 2"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பணித்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன.

126-131. வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின் முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி- குற்றமற்ற தெய்வ வடிவினையுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் ஒப்புமை காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த ஓவிய்க்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக் கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ;

சுடுமண்-செங்கல்; 3"சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை; 4"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்," 5"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்; 6"வித்தக ரியற்றிய" என்பர் பின்னும்.

132-145. விழுவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - அழவினைக் கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக் கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய மூன்று சரங்கள், பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ - அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு

1 சில்ப. 6 : 567.  2 சிலப்.27 : 181-6.   3 பெரும்பாண். 405.  
4 மதுரை. 516-8.  5 மணி. 21: 132-3   6 மணி. 3 : ;167.