பக்கம் எண் :

பக்கம் எண் :45

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
 

பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவுதிருந்தாத மழலையாகிய் இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவச்சுற்றுடைப் பூந்துகில் - அற்றத்தினை மறைக்காமற் சுறறப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும், தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து- பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல், இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல் களை யணிந்த மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழைக் கால்கோள் காண்மினோ என்-ஆலின் கிழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின் விழாக் கால்கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக் கண்டு நிற்போரும் ;

கோவையாகிய முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு கடுகை அப்புதல் மரபு ; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று ; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப்பாருமுளர். மெய் - சொல்லின் வடிவு, குதலை- இளஞ்சொல்; 1"குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை - காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவாகிய அணி ; இது தாலி என்றும் வழங்கும் ; இதனைச் சிறுவர்க்கு அணிதல் மரபு; 2"தாலி களைந்தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை யானையை வைத்து ஊர்தல் 3"பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும் கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும் குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர் நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர்

146-150. விராடன் பேரூர் விசயனாம் பேடியைக காணிய சூழந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண் அருச்சுனனாகிய


1 சிலப். 30 ; 114-5.      2 புறம். 77.      3 சீவக. 89.