|
9
பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை மணிபல்லவத்திடைப்
|
|
|
பீடிகைகண்டு
பிறப்பு உணர்ந்த பாட்டு
]
|
|
|
|
|
|
ஆங்குஅது கண்ட ஆயிழை அறியாள்
|
|
|
காந்தள்அம் செங்கை தலைமேல் குவிந்தன
|
|
|
தலைமேல் குவிந்த கையள் செங்கண்
|
|
|
முலைமேல் கலுழ்ந்துமுத் தத்திரள் உகுத்துஅதின்
|
|
5
|
இடமுறை மும்முறை வலமுறை வாராக்
|
|
|
|
|
|
கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன
|
|
|
இறுநுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்துஆங்கு
|
|
|
எழுவோள் பிறப்பு வழுஇன்று உணர்ந்து
|
உரை |
|
தொழுதகை மாதவ! துணிபொருள் உணர்ந்தோய்!
|
|
10
|
காயங் கரையில் உரைத்ததை எல்லாம்
|
|
|
|
|
|
வாயே ஆகுதல் மயக்குஅற உணர்ந்தேன்
|
|
|
காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப்
|
|
|
பூருவ தேயம் பொறைகெட வாழும்
|
|
|
அத்தி பதிஎனும் அரசாள் வேந்தன்
|
|
15
|
மைத்துனன் ஆகிய பிரம தருமன்!
|
உரை |
|
|
|
|
ஆங்குஅவன் தன்பால் அணைந்துஅறன் உரைப்போய்
|
|
|
தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவிடை
|
|
|
இன்றுஏழ் நாளில் இருநில மாக்கள்
|
|
|
நின்றுநடுக்கு எய்த நீள்நில வேந்தே
|
|
20
|
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந்நகர்
|
|
|
|
|
|
நாகநல் நாட்டு நானூறு யோசனை
|
|
|
வியன்பா தலத்து வீழ்ந்துகேடு எய்தும்
|
|
|
இதன்பால் ஒழிகென,
|
உரை |
|
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்
|
|
25
|
ஆவும் மாவும் கொண்டுகழிக என்றே
|
|
|
|
|
|
பறையில் சாற்றி நிறைஅருந் தானையோடு
|
|
|
இடவயம் என்னும் இரும்பதி நீங்கி
|
|
|
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்
|
|
|
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரைச்
|
|
30
|
சேய்உயர் பூம்பொழில் பாடிசெய்து இருப்ப,
|
உரை |
|
|
|
|
எங்கோன் நீஆங்கு உரைத்தஅந் நாளிடைத்
|
|
|
தங்காது அந்நகர் வீழ்ந்துகேடு எய்தலும்
|
|
|
மருள்அறு புலவ!நின் மலர்அடி அதனை
|
|
|
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
|
|
35
|
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய
|
|
|
|
|
|
அருள்அறம் பூண்ட ஒருபேர் இன்பத்து
|
|
|
உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள்,
|
உரை |
|
அரவக் கடல்ஒலி அசோதரம் ஆளும்
|
|
|
இரவி வன்மன் ஒருபெருந் தேவி
|
|
|
அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று
|
|
|
|
|
|
இலக்குமி என்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்
|
|
|
அத்தி பதிஎனும் அரசன் பெருந்தேவி
|
|
|
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
|
|
|
நீல பதிஎனும் நேர்இழை வயிற்றில்
|
|
45
|
காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய
|
|
|
|
|
|
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
|
|
|
பராஅரு மரபின்நின் பாதம் பணிதலும்,
|
உரை |
|
எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத்
|
|
|
திட்டி விடம்உணும் செல்உயிர் போனால்
|
|
50
|
தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை;
|
உரை |
|
|
|
|
ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்று ஆகலின்
|
|
|
கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய
|
|
|
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி;
|
உரை |
|
அணியிழை நினக்குஓர் அருந்துயர் வருநாள்
|
|
55
|
மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி
|
|
|
|
|
|
அன்றுஅப் பதியில் ஆர்இருள் எடுத்துத்
|
|
|
தென்திசை மருங்கில்ஓர் தீவிடை வைத்தலும்
|
உரை |
|
வேக வெந்திறல் நாகநாட்டு அரசர்
|
|
|
சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்துஆங்கு
|
|
60
|
அறச்செவி திறந்து மறச்செவி அடைத்துப்
|
|
|
|
|
|
பிறவிப்பிணி மருத்துவன் இருந்துஅறம் உரைக்கும்
|
|
|
திருந்துஒளி ஆசனம் சென்றுகை தொழுதி;
|
|
|
அன்றைப் பகலே உன்பிறப்பு உணர்ந்துஈங்கு
|
|
|
இன்றுயான் உரைத்த உரைதெளி வாய்என,
|
உரை |
65
|
சாதுயர் கேட்டுத் தளர்ந்துஉகு மனத்தேன்
|
|
|
|
|
|
காதலன் பிறப்பும் காட்டா யோஎன
|
|
|
ஆங்குஉனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம்
|
|
|
பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை
|
|
|
ஈங்குஇவன் என்னும் என்றுஎடுத்து ஓதினை
|
|
70
|
ஆங்குஅத் தெய்வதம் வாரா தோஎன
|
|
|
|
|
|
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான்என்,
|
உரை |
|
|
|
|
பீடிகை கண்டு பிறப்பு
உணர்ந்த காதை முற்றிற்று.
|
|
|