வண்ணனை
மொழிநூல்
இன்று தனிக்
கலையாக வழங்கியும் வளர்ந்தும்வரும் மொழிநூல் 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில்
முளைத் தெழுந்ததேனும், அதற்கு வித்துத் தமிழ்நாட்டில் கி. மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பே
இடப் பட்டதென்பது,
|
எல்லாச்
சொல்லும் பொருள்குறித் தனவே
|
(தொல்.
640)
|
|
மொழிப்பொருட்
காரணம் விழிப்பத் தோன்றா
|
(தொல்.
877)
|
|
இயற்சொல்
திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
|
(தொல்.
880)
|
|
வடசொற்
கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
|
(தொல்.
884)
|
என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் உணரலாகும்.
மேனாடுகளில் கடந்த முந் நூற்றாண்டுகளாக
வளர்க்கப்பெற்று வரும் மொழிநூல், தொடக்கத்தில் ஆங்கிலத்தில்,
(Science
of speech, Science of Language, Linguistic
Science
,
Linguistics, Glottology, Philology) எனப் பல பெயர்களைப்
பெற்றிருந்தது. இவற்றுள் (Linguistics,
Philology) என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன.
மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு
தழுவியதாகவும் ஒப்பு நோக்கியதாகவும் பல கூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசு
முல்லர் (Max Muller)
, விற்றினி (Whitney)
,
செசுப்பெர்சென் (Jespersen)
முதலிய மொழி
நூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர்.
ஆயின், அண்மையில், சில மேலை மொழிநூலறிஞர், சிறப்பாக அமெரிக்கர்,
மொழிநூலை,
|
1.
வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics)
2. வரலாற்று மொழிநூல் (Historical
Linguistics)
3. ஒப்பியல் மொழிநூல் (Comparative Linguistics)
|
என முக்கூறாகப் பகுத்து, அவற்றுள் வண்ணனை மொழிநூலையே சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.
இதன் பல குறைகள் உண்மைக்கு மாறாகவும் தமிழுக்குக் கேடாகவும் உள்ளன. அவையாவன:
|