3. மதங்கொள்ளுதல்.
" மதித்த களிற்றினின்"
(கம்பரா. பஞ்சசே. 56)
மதி = மதயானை. "கோண் மதித்திடர் கிடந்தன", (கம்பரா.
நாகபாச. 136)
மதி- மதம் = மிகுதி, பெருமை, வலிமை, வளம், செருக்கு, மதநீர்.
மதம் - மதன் = மிகுதி, வலிமை, செருக்கு.
மத்தம் = மதம்.
மத்தமா = யானை. மத்தம் - மதம் என்றுமாம்.
மத்தன் = கொழுத்தவன். "மத்த னிராவணன் கொதித்தான்"
(இராமநா. உயுத். 44).
மத்தம், மத்தன் என்பன மத்த என்று வடமொழியில் திரியும்.
|
மதம்-மதர்.
மதர்த்தல்=மிகுதல், செழித்தல், கொழுத்தல், மதங்கொள்ளுதல், செருக்குதல்.
|
|
|
பல
பொருள்கள் அல்லது வழிகள் அல்லது கருத்துக்கள் கலத்தலால், கலக்கமும் மயக்கமும் உண்டாகும்.
|
|
மத்தித்தல்=கலத்தல், மருந்து கலத்தல்
மத்தம் = மயக்கம். மத்தம்-மதம்-மதன்=கலக்கம்.
|
ஒ.நோ:
:
|
குல - குலவு - கலவு, கலவுதல் = கலத்தல். குலவுதல் = கூடுதல்.
குல - கல -
|
|
|
கலங்கு
- கலக்கு - கலக்கம். முய - முயங்கு -முயக்கம். முயங்குதல = தழுவுதல், கலத்தல். முய
- மய - மயங்கு - மயக்கு - மயக்கம் = கூட்டம், கலக்கம். மயத்தல் = மயங்குதல்.
"மயந்துளேனுலக வாழ்க்கையை" (அருட்பா, அபயத்திறன். 14).
|
|
மயக்கக்
கருத்தினின்று, உணர்வின்மை (மூர்ச்சை), வெறி, கோட்டி (பைத்தியம்), காமம் ஆகிய
கருத்துகள் தோன்றும்.
|
|
மத்தம் - மத்தன் = மதிமயங்கியவன்,
கோட்டி பிடித்தவன்.
மத்தம் - மதம் = குடிவெறி, கோட்டி.
மத்து = ஊமத்தை. மதத்தல்=மயங்குதல்.
மத்து, மத்தம், மத்தன் என்னும் இம் முச்சொல்லும் வட மொழியில்
மத்த எனத் திரியும்; மத என்பது mada
எனத் திரியும்.
செருக்கு, யானை மதம் ஆகிய இரு கருத்தும் மயக்கக் கருத்தினின்று
தோன்றியதாகவுங் கொள்ளலாம். ஒ.நோ: களி-களிறு. களித் தல்=கள்ளுண்டு வெறித்தல், மயங்குதல்.
நிலவொளியால் கோட்டி யுண்டாகுமென்று பண்டைக் காலத்தில்
கீழ் நாட்டிலும் நாட்டிலும் ஒரு கருத்திருந்ததால், திங்களுக்கு மயக்கந் தருவதுஎன்னும் பொருள்பற்றி
ஒரு பெயருண்டாயிற்று. |