|
தமிழ் மொழி வரலாறு 200
2. 2. 3. அ > உ; உ >
இ
|
வந்தது |
> |
வந்து |
|
இருபது |
> |
இருப தி |
குற்றியலுகரம் இகரமாகிறது. முன்பு குறிப்பிட்டது போல இ > யி என்றாகிறது.
2. 2. 4. ஐ
ஐ > அய் > அ
|
ஐம்பது |
> |
அம்பது |
|
தலை |
> |
தல |
|
யானை |
> |
யான |
ஐ > எய் > எ
பழைய
உச்சரிப்பான ‘ஐ > எய் > எ’ என்பதும் தொடர்ந்து வருகிறது.
நைவேத்யா > நெய்வேத்தியம்
‘கைப்போது’
என்பது ‘எப்போது’ என்பதோடு தொடை நயத்தில் வருகிறது. எனவே ‘கைப்போது’ என்பது
‘கெய்ப்போது > கெப்போது’ என உச்சரிக்கப்பட வேண்டும்.
ஏய் + எய் + அய்
எ அல்லது எய் என
உச்சரிக்கப்படுவது ஐ என எழுதப்படுவதால் ‘கண்ணிலெயும்’( > கண்ணிலேயும் ) என்பது
‘கண்ணிலையும்’ என எழுதப்படுகிறது. இது போலி நாகரிக ஆக்கமாகும்
(Hyper-urbanisation).
அகர எகர
மாற்றமானது மொழி முதலில் சமஸ்கிருத ஒலிப்புடை வெடிப்பொலிக்குப் பின்னர் வருவது என்பது
முன்னரே விளக்கப்பட்டது. எனவே அச்சூழலில் ஒள > அவு > எவு என்ற மாற்றம் நிகழ்கிறது.
கௌதமன் > கவுதமன் > கெவுதமன்.
2. 2. 5. எ > அ
‘ஐ > எ > அ’ என்னும்
மாற்றத்துடன் கூட ‘எ > அ’ என்னும் மாற்றம் மொழி முதலிலும் ஏற்படுகிறது.
எல்லாம் > அல்லாம்
வேண்டாம் > வாண்டாம்
|