பக்கம் எண் :

59

Tamil Virtual University

மழையே வா

  ஊசி போல் மின்னல் மின்ன,
ஊரிக் கிணறு தண்ணிவர,
பாசி போல மின்னல் மின்ன,
பாங்கிணறு தண்ணிவர,
சட்டியிலே மாகரைத்து
சந்தை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழிய வில்லை ;
கொள்ளை மழை பெய்ய வில்லை ;
கிண்ணியிலே மாகரைத்து
கங்கை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழியவி்ல்லை ;
கொள்ளை மழை பெய்ய வில்லை ;
மேழி பிடிக்கும் தம்பி
முகம் சோர்ந்து போகு தம்மா !
கலப்பை பிடிக்கும் தம்பி
கை சோர்ந்து நிக்கு தம்மா

உதவியவர் : ம. கிருஷ்ணன்
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி

இடம் :
முத்துகாபட்டி,நாமக்கல்வட்டம்,
சேலம் மாவட்டம்.