| 
 
  வண்டாளப் பட்சி, 
 வயலெறங்கி மேயுதிண்ணு 
 சிங்கார வில்லெடுத்து - நீ 
 சிற கொடிக்க வந்த வனோ? 
 மதுரைப் பெரும்பாதை-ரெண்டு 
 மங்கை நிண்ணு கோலமிட, 
 குதிரைப் பதி போட்டு-சொக்கர் 
 கோல மழிச்சாரே. 
 காடெல்லாம் ஓடி, 
 கதறி அலை மோதி, 
 காலெல்லாம் நோகுதையா, 
 கனியே உனைத் தேடி 
 வண்டடையும் சோலை, 
 மயிலடையும் குற்றாலம், 
 வண்டடைஞ்ச சோலையிலே-நீ 
 வந்தடைஞ்ச வான்மயிலே. 
 ஊருணியும் வெட்டி, 
 உசந்த மடமும் கட்டி, 
 தாரணியார் பூசை செய்ய-நீ 
 தர்ம குல வம்முசமோ! 
 கடலோரம் கோயில் கட்டி, 
 கந்த னென்று பேர் விளங்கி, 
 அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர் 
 ஆண்டி வேஷம் கொண்டாரோ? 
 			 |