அறுசீர்
ஆசிரிய விருத்தம்
தொண்டர்க் குறவே யானாரைத்
தூய
மறைமா நிழலாரை
அண்டர்க்
கிறையா மடலாரை
அக்கும்
எலும்பும் அணிவாரைக்
கொண்டல்
வண்ணன் எண்கண்ணன்
கூறற்
கருஞ்சீர் கொண்டாரைக்
கண்டத் துறையு
மாறுகடற்
கடுவுண்
டாரைத் துதிப்பாமே. (41)
(இ-ள்.)
தொண்டர்க்கு - அடியவர்க்கு, உறவே ஆனாரை - உறவாக ஆனவரை, தூய - மறுவற்ற, மறைமா
நிழலாரை - வேதமாகிய மாமரத்தின் நிழலில் எழுந்தருளியவரை, அண்டர்க்கு - வானவர்க்கு,
இறை ஆம் - தலைவராகிய, அடலாரை - வல்லமை உடையாரை, அக்கும் எலும்பும் அணிவாரை -
சங்கு மணியையும் எலும்பையும் அணிபவரை, கொண்டல் வண்ணன் - முகில் போன்ற கருநிறமுடைய
திருமாலும், எண் கண்ணன் - எட்டுக் கண்களையுடைய நான்முகனும், கூறற்கு - இத்தன்மையன்
என்று சொல்லுதற்கு, அருஞ் சீர் கொண்டாரை - அரிய சிறப்புக் கொண்டவரை, கண்டத்து
உறையுமாறு - கழுத்தில் தங்கும்படி, கடல் கடு உண்டாரை - கடலின்கண் தோன்றிய நஞ்சை
உண்டவரை, துதிப்பாமே - யாம் துதிப்போம், ஏ நெஞ்சே நீயும் வருவாயாக.
துதிப்பாம் - தன்மைப்பன்மை.
எலும்பு அணிவார்: “கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ” என்பதனாலும் அறியலாம்.
|