தூது (மேகம்)
நேரிசை
வெண்பா
கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யான்
நடுக்கை
யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச்
செல்லே!
சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால்
வல்லே
தொடையிரந்து வா. (42) |
(இ-ள்.)
கொடுக்கைக்கு - கொடைத் தொழிலுக்கு, செல்லே - மேகமே, சிறந்தாய் - நீ சிறப்புற்றாய்,
ஆதலால், திருக்கச்சி வாணர்பால் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரிடத்துச்
சென்று, தொடை யிரந்து - மேலே கூறிய கொன்றைமாலையை வேண்டிப் பெற்று, வல்லே வா
- விரைந்து வா.s
நடுக்கை - நடுங்குதல். நடுக்கமுறும் விதம்: கொன்றை
மாலையைப் பெறாததால் துன்பம் உண்டாகும் விதம்.
கொடைத் தொழிலுக்கு உரிய மேகம்தான் கொடுத்தற்குரிய
நீரைக் கடலிலிருந்துகொள்ளுந் தொழிலிலும் வல்லமையையுடையதாதல் கண்டு, இறைவன்பால்
கொன்றைத் தொடையல் பெற்றுக்கொண்டுவருமாறு ஏவின நயம் பாராட்டற்குரியது.
|