பக்கம் எண் :

89

Kachchik Kalambagam

கட்டளைக் கலிப்பா

      பயன்றரு கச்சிவாழ்
            பண்ண வன்னடிப் பத்தியில் பாவிகாள்!
      கூடு விட்டுயிர்  தொன்றையுங்
            கொண்டு லாமையை உன்னிலீர்;
      வீடு கட்டுவீர்; வெள்ளிபொன் ஈட்டுவீர்;
            வேண்டு நன்மணி ஆடையும் பூணுவீர்;
      ஏடு கட்டிய பால்தயிர் உண்ணுவீர்;
            எப்ப டிப்பெறு வீர்பொற்ப தத்தையே.             (56)

பட்டும் - வருத்தப் பட்டும், பயன் தரு - பயனைக் கொடுக்கின்ற, கச்சி வாழ் - காஞ்சியில் வாழ்கின்ற, பண்ணவன் - அண்ணலென எண்ணுங் கடவுளது, அடி - திருவடியினிடத்து, பத்தி இல் - காதல் இல்லாத, பாவிகாள் - பாவிகளே!, கூடு விட்டு - உடம்பை விட்டு, உயிர் போம் பொழுது - உயிர் நீங்கும் காலத்து, ஒன்றையும் - ஒரு பொருளையும், கொண்டு  இலாமையை - உங்களுடன் கொண்டு  இல்லாமையை, உன்னிலீர் - நினையீர், வீடு கட்டுவீர் - வீட்டைக் கட்டுவீர், வெள்ளி பொன் ஈட்டுவீர் - வெள்ளியையும்  தேடிக் குவிப்பீர், வேண்டு நன் மணி ஆடையும் - வேண்டும் வயிரக் கலன்களையும் ஆடையையும், பூணுவீர் - அணிவீர், ஏடு கட்டிய - ஏடு பொருந்திய, பால் தயிர் உண்ணுவீர் - பாலும் தயிரும் உண்பீர், (இங்ஙனம் வாழ்நாளை வீணாளாகப் போக்குவீராயின்)  பதத்தை - அவ் வேகாம்பரநாதரது அழகிய திருவடிப்பேற்றை, எப்படிப் - எப்படி அடைவீர்?

பண்ணவன் - கடவுள். (பண்ணவன் - எண்குணன்; சிலப். 10:108).

என்றது, சிறந்த வீட்டை.

வீடு - விருப்புக்களைக் கொடுக்கும் பற்றுக்களினின்று விடுதலை பெற்று இளைப்பாறும் இறைவன் அருள் நீழல்.

ஒன்று - ஆகுபெயர். நன்மணி என்றவிடத்து எண்ணும்மை விகாரத்தாற்

மணி - ஆகுபெயர்.

''பண்ணவன் னடி’ என்றவிடத்து, னகரம் விரித்தல் விகாரம்.

“கூடுவிட் டிங்கு ஆவிதான்  பின்பு” (வாக்குண்டாம்). கூடு - உடல்.

வருத்தப்பட்டும் பயன் தரும் இறைவனடிப்பேற்றை விரும்பாது பயன் தாராத நுகர்ச்சிப் பொருள்களையே விரும்பும் அறியாமை என்னே என்பது கருத்து.