| 110 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
செங்கண்மாதர்
தெளித்த குங்குமக் குழம்பு - குங்குமக் குழம்பைத்
தெருவிற்றெளித்தல் அழகின் பொருட்டு. அளறு
- குழம்பினால் உண்டாகிய
சேறு. அளறு புலர்த்தும் - தெருவிற் செல்வாரைச் சேறு இழுக்காமல், துகள்,
புலர்த்தி உபகரிக்கும். தம்மால் விளைந்த இடையூற்றைத் தாமே போக்குதல்
என்ற அறவினையின் குறிப்பாம். “செழுந்தாதே துகளன ... சேறே யிழுக்கின”
(திருக்குறிப்பு - 108) என்றும் பின்னரும் சேர்த்துக் கூறுவது இங்குக்
காணத்தக்கது.
கோதை
- மாலை. பொங்குதல் - மிகுதல். துகள்
- மாலையின்
பூக்களிலிருந்து உதிரும் பூந்தாது; மகரந்தப்பொடி. இது அதிசயோத்தி அணி
என்பர். இறைவன் திருவடி தூது நடந்த மணத்தினைக் குங்குமக் குழம்பு
சாத்தி வணங்கினார் என்ற குறிப்பும் மேற்பாட்டைத் தொடர்ந்து
தோற்றுவதாம். 7
| 93.
|
உள்ள
மாருரு காதவ? ரூர்விடை |
|
| |
வள்ள
லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். |
8 |
(இ-ள்.)
உள்ளம் ஆர் உருகாதவர் - யாவர்தாம் மனமுருகாதவர்கள்;?
ஊர்விடை ... பூவைகள் - இடபத்திலே எழுந்தருளி வரும் தியாகேசரது
திருவாரூரின் தெருப் பக்கங்களிலெல்லாம் தெளியும் ஓசைத்
திருப்பதிகங்களைப் பசிய கிளிகள் பாடுவன; அவற்றை நாகணவாய்ப்
பறவைகள் கேட்பன.
(வி-ரை.)
ஆரூர் வீதி மருங்கெலாம் திருப்பதிகங்கள் கிள்ளை பாடுவ
- பூவை கேட்பன எனில், யார் தாம் உள்ள முருகாதவர் உளர்? என்க.
ஊர்விடை வள்ளலார்
- விடை ஊர் வள்ளலார் என மாற்றுக.
விடையூர்ந்து வரும் வீதிவிடங்கராகிய தியாகேசர். வீதிச் சிறப்பைச் சொல்லி
வருகின்றாராதலின் அதற்கேற்ப ஊர்விடை வள்ளலார் என்று கூறினார்.
வள்ளல்
- வரையாது கொடுப்போன். அருளாலும் பொருளாலும்
வரையறையின்மையின் இவரே உண்மை வள்ளலாவர். பிறர்க்கெல்லாம் இது
உபசார மொழியேயாம் என்பது கருத்து. இதனாலே வண்மைக்கிறைவர் -
தியாகேசர், தியாகராசர் என்று இவர்க்குப் பெயராயிற்று.
மருங்கு எலாம்
- மேலே சொல்லிய வீதிகளின் பக்கமெல்லாம்.
தெள்ளும் ஓசை
- தெளிந்த ஓசையுடைய; தெளிவிக்கும் ஓசையுடைய
என்றுமாம். தெள்ளுதல் - தூக்கி எறிதல் என்று
கொண்டு, சொல்வோர்
கேட்போர்களது வினைகளை ஓடத்துரக்கும் ஓசை என்றலுமாம். இது தெள்ளு
என்ற சிறுவர் விளையாட்டினுள் வழங்குதல் காண்க. “உள்ளத் துறுதுய
ரொன்றொழியா வண்ணமெல்லாந், தெள்ளுங்கழலுக்கே சென்றூதாய்
கோத்தும்பீ” - என்ற திருவாசக ஆட்சியும் காண்க.
திருப்பதிகங்கள்
- சைவ சமய பரமாசாரியர்களான நான்கு
பெருமக்களும் காரைக்காலம்மையாரும் அருளியவை. பெரும்பான்மை பத்துப்
பாடல்களாகியதனாற் பதிகம் எனப் பெற்றன. இப்பெயர் இப்பாடல்களுக்கே
காரண இடுகுறியாக வழங்குவது உயர்ந்தோர் வழக்கு. உயர்ந்தோர்
மரபின்மையால் ஏனையோர் பாடல்களுக்கு இப்பெயர் வழங்குதல் பொருந்தா
என்க.
| "வழக்கெனப்படுவ
துயர்ந்தோர் மேற்றே, நிகழ்ச்சி யவர்கட் டாகலான" |
என்பது இலக்கணம். திருக்கோயில்
- திருவாயில் என்பனபோல
இவற்றிற்கும் திருப் பதிகங்கள் என்று உரைத்தலே மரபா மென்று காட்டினார்
ஆசிரியர்.
இவை, சொல்வார்க்கும் கேட்பார்க்கும் வினைபோகும்
என்பதை,
“... தமிழ் சொல்லுவார்க்கும் மிவைகேட்பவர்க் குந்துயரில்லையே” -
திருநாகை - செவ்வழி - (11). "தானுறுகோளு நாளும் மடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய், ஆன சொன்மாலை" - (கோளறு பதிகம்),
எனும் திருவாக்குக்களின் பிரமாணங்களால் உணர்க.
|
|
|
|