“சென்னி 
            யபயன், குலோத்துங்கச் சோழன், றில்லைத் திருவெலலை  
            பொன்னின் மயமாக் கியவளவர் போரே, றென்றும் புவிகாக்கும் 
            மன்னர் பெருமா, னநபாயன”        - 
            சண்டீசர்புராணம் - 8. | 
         
       
          
       
      
        
          “மன்னுதிருத் 
            தில்லைநகர் மணிவீதி யணிவிளங்கும் சென்னி,  
                                                 நீடநபாயன்......... 
            ”   
                                 - 
            புகழச்சோழ நாயனார் புராணம் - 8. | 
         
       
       
            கொண்டு 
      விரும்பும் அநபாயன் அரசவை என நிகழ்காலத்திற் 
        கூறியதனால் காலமுங் களனும் காரணமுங் கூறியதாயிற்று. நீடூழிபார் 
        ஆயசீர் அநபாயன் - இப்போது அநபாயர் உலகை ஆள்கின்றார்; அவர்  
        அரசு நீடூழி நிலை பெறுக; அதன்கீழ் உலகம் ஆகுக; (ஆக்கம் பெறுக.) -  
        என்று இப்புராணம் பாடுவித்த உபகாரத்தின் பொருட்டு வாழ்த்துக்  
        கூறியவாறுமாயிற்று. “வேந்தனு மோங்குக” என்ற தேவாரமும் காண்க. 
         
         
      
        
          “.......வையம் 
            பொதுக்கடிந் தினிது காக்கும்  
            கொற்றவ னநபா யன்பொற் குடைநிழற் குளிர்வது..... ” 
                                 - 
            திருநாட்டுச் சிறப்பு - 35. | 
         
       
      
       
      என்ற இடத்திலேயும் அந்நாளிற் சோழவளநாடு அநபாயருடைய ஆளுகையில் 
      வாழ்கின்றதாக நிகழ்காலத்துக் குறித்ததும் காண்க. பாடுவித்த அரசன்  
      சிறப்பை வாழ்த்தியதும் நன்றி பாராட்டியதும் ஆம். இக்கருத்துப் பற்றியே  
      ஆசிரியர் அநபாயருடைய பெயரை இப்புராணத்துள்ளே பதினொரு  
      இடங்களில் அமைத்துள்ளார். அங்கங்கே கண்டு கொள்க.1      8 
       
      
         
          | 9.  
           | 
          அருளி 
            னீர்மைத் திருத்தொண் டறிவருந்  
             | 
            | 
         
         
          |   | 
          தெருளி 
            னீரிது செப்புதற் காமெனின்  
            “வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய  
            பொருளி னாகு” மெனப்புகல் வாமன்றே. | 
             9 
             | 
         
       
       
           (இ-ள்.) 
        அருளின்.......தெருளினீர் - அருள்வழி நிற்கும் 
         
        தன்மையாயுள்ள திருத்தொண்டின் புகழ் அறிய அரிதென்று (மேலே  
        “அளவுகூட உரைப்பது ” என்றும், “தெரிவரும் பெருமை ” என்றும் 
        கூறி  
        உணர்ந்துள்ள நீர்; இது செப்புதற்கு ஆம்? எனின் - இது செப்புதற்குத்  
        துணியலாமோ? என்பீராகில்; வெருள் இல்....பொருளின் 
        - மயக்க நீக்கும் மெய்ம்மொழியாலே வானினிடத்தே யமர்ந்து கூறியருளிய பொருளின் 
         
        துணையாலே; “ஆம்” எனப்புகல்வாம் 
        - அது யாம் செப்புதற்கு  
        உரித்தேயாம் என்று துணிந்து கூறுவோம்;அன்றே - அவன் மெய்ம்மொழி  
        கூறித் துணைசெய்த அப்பொழுதே. 
         
             (வி-ரை.) 
        அருளின் நீர்மைத் திருத்தொண்டு - பிறிதொன்றினும் 
         
        படாது அருள்வயப்பட்டு அவ்வழியே நிற்கும் திருத்தொண்டு. “ஏகனாகி 
        இறைபணி நிற்க” என்ற விதிப்படி உள்ள அடிமைத் திறம். அறிவரும் 
         
        தெருளினீர் - அறிவரிது என்ற தெருட்சி பெற்ற, அறிவு - அரும் தெருள் -  
        இல் - நீர் என்று பிரித்து, உரிய அறிவும் அரிய ஞானமும் இல்லாத நீர்  
        என்று உரைத்தலும் ஒன்று. 
         
             ஆம் எனின் - ஆமோ என்று வினவுவீராயின். ஆம் 
        - ஆமோ?;  
        வினாத்தொக்கது. 
         
             வெருள் 
        - வெருட்சி; மயக்கம்; இல் - இல்லையாகச் செய்யும்;  
        போக்கும்.  
         
             மெய் மொழி வான்நிழல் கூறிய பொருள் - (1) வானினின்றும் 
        நிழலாய்க் 
        கூறிய மெய்ம்மொழிப் பொருள். (2) மெய்ம்மொழிவான் 
        நிழல் -  
        உண்மையே மொழிபவன் - சத்தாகிய இறைவனுடைய நிழல். வெளிப்படாத 
         
        நிலை - மறைந்து 
         
       
       1 எனது 
        சேக்கிழார் - 180 - 183 பக்கங்களிற் 
        காண்க.
        
      |