| 190 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
ஞானபோதம் 10, 11,
12-ம் சூத்திரங்களின் கருத்தாவன. உலகத்தாரைத்
தீமைபோக்கி உய்விப்பதற்கே நம்பிகள் அவதரித்தார் என்பதை முன்னர்க்
கூறினார்.
உலகம்
- உயிர்கள். உய்தல் - நம்பிகள் நடந்துகாட்டிய
சிவ
வழிபாட்டில் நிற்பதாலும், சொல்லிக்காட்டிய திருத்தொண்டத்தொகை
அருண்மொழி பயில்வதாலுமாம்.
அவதாரம் செய்தல்
- பிறரை உய்விக்க வருதல். ஆதலின் உலகம்
உய்ய அவதரித்தார் என்றார். மேற்பாட்டினுரையிற் காண்க. பிற இடத்தும்
இவ்வாறே கொள்க. 3
| 150.
|
தம்பிரா
னருளி னாலே தவத்தினான் மிக்கார்
போற்று |
|
| |
நம்பியா
ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்டி
சாத்திச்
செம்பொனா ணரையின் மின்னத் தெருவிற்றே
ருருட்டு
நானில். |
4 |
| 151.
|
நரசிங்க
முனைய ரென்னு நாடுவா ழரசர் கண்டு |
|
| |
பரவருங்
காதல் கூரப் பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத்
தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப வன்பினான் மகன்மை
கொண்டார்.
|
5 |
150.
(இ-ள்.) தம்பிரான்.......சாற்றி
- (அவதரித்தாராகிய அவர்) தாம்
அடிமை செய்யும் தமது பெருமானது அருளினாலே, மாதவர்களும்
போற்றத்தக்க நம்பியாரூரர் என்ற திருநாமம் சூட்டப்பெற்றவராய்;
மிக்க.......மின்ன - (காவல் தொழிலில்) மிகுந்த ஐம்படையும் சதங்கையும்
அணியப்பெற்றும், அழகிய மணிகளிழைத்த சுட்டி அணியப்பெற்றும்,
செம்பொன் நாண் திருவரையில் விளங்கும்படியாக; தெருவில்..........நாளில் -
தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடுகின்ற நாள்களில் (ஒருநாள்), 4
151. (இ-ள்.)
நரசிங்க.......கூர - அந்நாட்டை வாழ்வுபெற அரசுபுரியும்
நரசிங்க முனையர் என்னும் அரசர் கண்டு இவரிடத்தே சொல்ல அரிய
ஆசை மிகுந்ததனாலே; பயந்தவர் ....... கொண்டார் - பெற்றோர்களிடம்
போய் நண்புரிமையினாலே இக்குழவியினை வேண்டிப்
பெற்றுக்கொண்டுபோய்த் தங்கள் மரபில் அரசகுமாரனைப் போல அன்பு
மிகுதியினால் தமக்கு மகனாந் தன்மையிலே ஏற்றுக்கொண்டனர். 5
150. (வி-ரை.)
தம்பிரான் - தமக்கு உரிய பெருமான். அருளினாலே
நாமமும் சாற்றி - என்று கூட்டுக. சாதகர்மம் முதலிய சடங்குகளில் பூர்வ
புண்ணியத்தின் வசமாகக் கிடைத்த இப்பிறவி என்று தொடங்கிக் காணும்
வழக்கு உண்மையால், இங்கு இவர் அவதரித்து நாமமிடப்பெற்றது முன்
புண்ணியப்பயனாகிய தம்பிரானருளினாலே என்றார். அருளினாலே -
அருளைப் பெற்றமையினாலே (நம்பியானவர்) - என்பது இராமநாதச்
செட்டியார் உரைக்குறிப்பு. சாற்றி - சாற்றக்கொண்டு
- சாற்றப்பெற்று -
என்னும் பொருளில் வந்தது.
சாற்றி - சாத்தி - சாத்தி - செயப்பாட்டுவினைகள்
செய்வினையாகக்
கூறப்பட்டன.
தவத்தின் மிக்கார்
போற்றும் - போற்றும் நாமம் என்க. உபமன்னிய
முனிவர் முதலிய மாமுனிவர்களும் எடுத்துத்துதிக்கின்ற திருப்பேர் ஆதலின்
மிக்கார் போற்றும் என்றார். தவத்தினின் மிக்கார்
- மாதவர்கள் -
பெருமுனிவர்கள். இது க. சதாசிவஞ் செட்டியார் கண்ட உரை. முனிவர்கள்
வெள்ளையானையுடன் வந்து நம்பிகளைத் திருக்கயிலைக்கு அழைத்துச்
சென்றமையும், உபமன்னிய முனிவர் “நம்பியாரூரன் நாந்தொழுந்
தன்மையான்“ என்று எடுத்து வணங்கித் துதித்ததும் இங்குவைத்துக்காண்க.
பெருமிழலைகுறும்பநாயனார் - கழறிற்றறிவார் நாயனார் - சோமாசிமாற
நாயனார் முதலிய பெருமக்கள் போற்றியதும் காண்க.
|
|
|
|