|
கோவினுக்
கருங்கலம் கோட்ட மில்லது என்பது தேவாரம்.
திருமனம் - திரு - மோட்ச சாம்பிராச்சியமான
ஐசுவரியம். திருநின்ற
செம்மையே செம்மையாக் கொண்ட என்றபிரமாணத்துட் காண்க. அசைதலே
தன்மையாக் கொண்ட மனம் சிவபெருமானைப் பதித்தபடியால் அசையாமல்
நின்று அசலத்துக்கு ஒப்பாயிற்று.
சிலம்பு - இயற்கையாலே அசையாதது சிறப்பன்று; சலிப்புள்ள
மனம்
தன் இயல்பிற்கு மாறாய்ச் சலிப்பில்லாமல் நிற்பது அதனிலும் சிறப்பாம்
என்பது குறிப்பு. தன்மை - பெருமை - தூய்மைகள் இவ்விரண்டிடத்தும்
பொதுத்தன்மைகளாம் என்க.
ஒங்கும்
- ஒங்கும் என நிகழ்காலத்தாற் கூறினார்.வேந்தனு
மோங்குக என்றபடி. அநபாயரை வாழத்தியவாறு மாயிற்று. 12
| 23.
|
அன்ன
தன்றிருத் தாழ்வரை யின்னிடத்
|
|
| |
தின்ன
தன்மைய னென்றறி யாச்சிவன்
றன்னை யேயுணர்ந் தார்வந் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீ ருபமன் னியமுனி. |
13 |
(இ-ள்.)
அன்னதன் ... இடத்து - மேலே கூறிய தன்மைகளைப்
பொருந்திய கயிலாய மலையின் சாரலினிடத்தே; இன்ன ... தன்னையே -
இப்படிப்பட்ட தன்மையுடையான் என்று யாவராலும் அறியப்படாதவராகிய
சிவபெருமானையே; உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் - உணர்ந்துகொண்டு
ஆசைபெருக அனுபவித்துக் கொண்டிருக்கிறான்; உன்னரும் சீர்
உபமன்னியமுனி - நினைத்தற்கும் அரிய சிறப்பினையுடைய உபமன்னிய
முனிவர்.
(வி-ரை.)
அதன் தாழ்வரை யிடத்து உபமன்னியமுனிவர் சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் என்க.இன்ன தன்மையன்
என்றறியொண்ணா எம்மானை என்பது சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்.
அறியாச் சிவன்
- அறியப் பெறாத சிவன். செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது. சிவன் மனத்தா லுணர்தற்கும் வாக்கினால்
ஒதுதற்கும் அறியவன் என்பது. உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் என
முதற்றிருப்பாட்டிலேயே அறிவித்தமை காண்க.
தன்னையே - ஏகாரம்
தேற்றம்; பிரிநிலையும் ஆம். சிவனையே
யன்றி வேறொருவரையும் உணராதவன் - வணங்காதவன் என்பது.
சம்பு
வின்னடித் தாமரைப் போதலால்
எம்பிரா னிறைஞ் சாய் |
(19) |
என்று மேலே குறிப்பதையும் காண்க.
மற்றோர்
தெய்வம் கனவிலும் நினையாது
-
திருவாசகம் |
உன்னையல்லா
லொருதெய்வ முள்கேன்
-
அப்பர் சுவாமிகள் |
சென்றுநாஞ்
சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்
சிவபெருமான் றிருவடியே சேரப் பெற்றோம்
-
அப்பர் சுவாமிகள். |
அத்தாவுன்
னடியலா லரற்றா தென்நா
-
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்
|
|