பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு39

Periya Puranam

     மெய்ப்பொருள - என்றும் உள்ளதாகிய சத்துப்பொருள்; இறைவன்.
இவனல்லாதன எல்லாம் மெய்ப் பொருளல்லாதவையே. அவ்வாறு
மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணர்ந்து அலைவதுதான்
மயக்கம். அதுவே பிறப்புக்குக் காரணம் - எனத் திருவள்ளுவர்
பொருளல்லவற்றை” எனும் திருக்குறளால் அறுதியிட்டார்.

     சாத்தும் - என்பதனை நீற்றுக்கும் கூட்டுக.

     மாலையும் - நீறும - இவற்றைத் தனக்கென வேண்டானாயினும்
உலகராகிய உயிர்களின் பொருட்டு அணிந்து கொள்வான் இறைவன்.

“பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ”

என்ற திருவாசகம் காண்க.

     அள்ளும்நீறு - மனங்கவரு மாண்புடைய திருநீறு. அள்ளுதல் -
சித்தந்திரை கொள்ளுதல். “இளங்கொங்கையிற் செங்குங்குமம் போலும்
பொடி”(திருப்பல்லாண்டு); அள்ளுதல - விரல்களினாற் கூட்டி எடுத்தல்
என்றலுமாம்.

     நீறு - நீற்றப்பெற்றது; உயிர்களின் வினைகளை நீறு செய்வது.
பஸ்மசாபாலஉபநிடத முதலிய வேதங்களாற் றுதிக்கப்பெற்ற பெருமை
வாய்ந்தது. அவைபோலவே திருஞானசம்பந்த நாயனார் திருநீற்றுப் பதிகம்
என ஒரு தமிழ்வேதத்தனிப் பதிகத்தாலே இதனைத் துதித்திருப்பதும்
காண்க.                                                  21

32. அன்ன வன்பெய ராலால சுந்தரன்
 
  முன்ன மாங்கொரு நாண்முதல் வன்றனக்
கின்ன வாமெனு நாண்மலர் கொய்திடத்
துன்னி னானந் தனவனச் சூழலில்.
22

     (இ-ள்.) அன்னவன் ... சுந்தரன - அவர் பெயர் ஆலாலசுந்தரர்
என்பதாம்; முன்னம் ... சூழலில் - முன் ஒரு நாள் கயிலையில்
இறைவனுக்குச் சாத்துவதற்காக விதிப்படியுள்ள புதுப் பூக்களைக்கொய்து
எடுக்கும் பொருட்டுத் திருநந்தன வனத்திலே அவர் சேர்ந்தனர்.

     (வி-ரை.) ஆலால சுந்தரன் - ஆலகால விடத்தைச் சிறிதளவாகச்
செய்து கையிலே ஏந்திச் சென்று சிவபெருமானிடத்துக் கொடுத்தமையால்
இப்பெயர் வந்தது.

“அன்ன சுந்தரற் காலால மாழியின்
முன்னம் முன்னவ னுண்ணமற் றன்னதைத்
தன்ன கங்கைத் தழீஇக்கொடு நல்கலாற்
றுன்னு மாலால சுந்தர நாமமே”

என்பது பேரூர்ப் புராணம்.

     தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறும்பொருட்டுத் திருப்பாற்கடல்
கடைந்ததுவும், அதுகாலை ஆலகால விடம் எழுந்ததுவும், அப்போது
தேவர்களைக் காக்கவேண்டி அதனைச் சிவபெருமான் உண்டருளியதோடு
சாட்சியாக யாவரும் கண்டு தொழுது உய்யவேண்டிக் கழுத்தின் அளவிலே
விளக்கமாக நிறுத்தியதுவும், பிறவும் சிவ - விஷ்ணு - பிரம - முதலிய
மாபுராணங்கள் எனும் பதினெண் புராணங்களும் பேசும். ஆதலின் அது
எம்மதத்தரும் சம்மதிக்கும் விளக்கமான உண்மையாம்.

     நாண்மலர் - அன்றலர்ந்த புதுமலர்.

     இன்ன ஆம் எனும் - இவை இவை பெருமானுடைய பூசைக்கு ஆகும்
என்று விதிக்கப்பெற்ற. இவ்விதிகள் புட்பவிதி முதலியவற்றுட் காண்க. (வரும்
பாட்டிலும் இவ்வாறே கொள்க.)

     அன்னவன் பெயர் ஆலால சுந்தரன; முதல்வன் தனக்குஆம் மலர்
கொய்திட நந்தனவனச் சூழலில் (அவன்) துன்னினான் - எனக் கூட்டி
முடிக்க.