| 362.
|
அளவிலா மரபின்
வந்த மட்பல மமுதுக் காக்கி
|
|
| |
வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க்
கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு
நாளின்
இளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய
ரானார்.
|
3
|
(இ-ள்.)
அளவிலா......ஆக்கி - (அவர்) அளவுட்படாத
-
பரம்பரையில் தமது மரபு வழியே நின்று செய்துவந்த தொழிலிலே செய்யும்
மட்கலங்களைத் தமது இல்வாழ்க்கையின் சீவனத்துக்கு ஆகிய அளவில்
மட்டுமே ஆக்கிக்கொண்டு; வளர்.....ஓடளித்து
- வளர் பிறையை அணிந்த
இறைவனடியார்கள் வேண்டிய பலிப்பாத்திரங்களை அவர்கள் எப்போதும்
மகிழ்ந்து கொள்ளும்படி நிறையக் கொடுத்து; ஒழுகு நாளில்
- ஒழுகி
வருகின்ற நாளிலே; இளமை....ஆனார் - இளமை
மீதூர் தலினால்
சிற்றின்பத் துறையிலே எளியராயினார்.
(வி-ரை.)
அளவிலா மரபின் வந்த - அளவு
காணமுடியாதபடி
தொன்று தொட்டு வழங்கி வந்த மட்கலத்தொழில். அளவிட முடியாத
பயனுடையதாய், “ஆரியன் குலால னாய்நின்றாக்குவ னுலக மெல்லாம்“
என்றபடி, இறைவனது சிருட்டித் தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில்
வந்ததாய் உள்ள என்றுரைத்தலுமொன்று.
அமுதுக்காக்கி -
அமுது சமைத்தற்காக வேண்டிய பற்பல
வகைகளிலும் படைத்து என்று உரை கூறுவாருமுண்டு. தமது அமுதுக்கு
- சீவனத்துக்காக மட்கலங்களையும், அடியார்க்கு உதவ ஓடுகளையும் -
பலிப்பாத்திரம் முதலியவையும் - செய்து வந்தார் என்பதே சிறந்த
பொருளாம். தமது குலத்துக்குரிய அளவிலா மட்பாண்டங்களைச்
சீவனார்த்தமாக வனைந்து என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.
வளர் இளந் திங்கட்
கண்ணி மன்றுளார் - வளர் திங்கள்
எனவும், இளந்திங்கள் எனவும் கூட்டுக. முன்னர்த் தேய்ந்து வந்தது
வளர்ச்சி பெறுவதாய் என்க. இளந்திங்கள்
- பிறைச்சந்திரன். “மாதர்ப்
பிறைக்கண்ணி யானை“, “போழிளங் கண்ணியினானை“, “வளர்மதிக்
கண்ணியி னானை“ என்ற அப்பர் பெருமான் தேவாரங்கள் (திருவையாறு
- காந்தாரம்) காண்க. திங்களைத் தலையிற் சூட்டிய மாலைபோல
அணிந்தவன். உளமகிழ் சிறப்பின் - உள்ளம் மகிழத்தக்க சிறப்பினாலே.
மல்க - நிறைய. மகிழ் சிறப்பின் உளம் மல்க என்று மாற்றிக்
கூட்டியுரைத்தலுமாம்.
இளமை மீதூர
- இளமை மீதூரப்பெற்றதனாலே. மீதூர -
மிகுதிப்பாட்டை அடைந்ததனாலே. இன்பத்துறை
- இங்குச் சிற்றின்பப்
பகுதியாகிய காமச்செயல்களைக் குறித்து நின்றது.
எளியரானார்
- அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு
எளியராக ஆயினார். ஆயினவகை பின்பாட்டிற் குறித்தார்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் நூல்களிற் றடுக்கப்பட்டதாயினும்
எளியராயினமையில் அதனை விலக்கலாகாதவராயினார்.
இளமை மீதூர
- என்பதற்குக் கழிந்த இளமை பிறர்போலக்
கழிந்தே போகாது மீளவும் பெறும்படியாக; மீது -
மேலும்; ஊர - வர -
என்ற சரிதக்குறிப்புப் பொருளும் தொனித்தல் காண்க. என்றும் மன்றுளார்
உளமகிழ் சிறப்பின் மல்க அடியார்க்கு ஓடளித்து என்று கூட்டி
யுரைத்தலுமொன்று.
அளவிலாப்
- பொருளின் மரபின் வாழ்க்கை - என்பனவும்
பாடங்கள். 3
| 363.
|
அவர்தங்கண்
மனைவி யாரு மருந்ததிக் கற்பின்
மிக்கார்
|
|
| |
புவனங்க
ளுய்ய வையர் பொங்குநஞ் சுண்ண
யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத் தகைந்துதான் றரித்த
தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத் “திருநீல கண்ட“
மென்பார்.
|
4 |
|