பக்கம் எண் :


498 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam


405. அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்;
 
       அளவில் செல்வத்து வளமையி னமைந்தார்;
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
     திறத்தின் மிக்கவர்; மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
     வேண்டும் யாவையு மில்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கு
     மியல்பி னின்றவர்; உலகியற் பகையார்.
2