|
(இ-ள்.)
அக்குலப்பதி...வணிகர் - அந்த வளம்பதியிலே
நிலைத்து
வாழ்வாராகிய பெருங்குடி வணிக மரபினர் (இப்புராணத்திற்குரிய நாயனார்);
அளவில்...அமைந்தார் - அளவில்லாத செல்வத்தினால் வந்த எல்லா
வளங்களையும் உடையவரானார்; செக்கர்......மிக்கவர் - சிவந்த மாலைக்
காலத்தில் விளங்கும் பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய
சிவபெருமானுடைய அடிமைத் திறத்திற் சிறந்தவர்; மறைச் சிலம்பு....
நின்றவர் - வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையுடையார்
பெரும் சிறப்புடைய அடியவர்கள் யாவரேயாயினும், அவர்கள்
வேண்டியவை எவையேயாயினும் இல்லையென்னாதே கடல் சூழ்ந்த இந்த
*உலகிலே விளக்கமுற முன்னே கொடுக்கும் தன்மையிலே நிலைத்து
நின்றவர் உலகியற்பகையார் - இவ்வுலகிலே இயற்பகையார் என்ற
திருநாமமுடையவர்.
1302(வி-ரை.)
குலப்பதி - பெருமையும் வளமும்
மிகுந்த நகரம் .
“குலவெஞ்சிலையால்“ - திருஞான - தேவா - தக்கேசி - திருப்பழனம்
- 5, “குலவரையே சிலையாக“ - திருநா - தேவா - காந்தாரம் -
திருவேகம்பம் - 10 முதலியவை காண்க. மேலே வளம் புகார் என்றதும்
காண்க. அப்பதிக் குலக்குடி முதல் - என்று கூட்டி யுரைப்பது மொன்று.
வணிகர்களாவார் நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர்.
அவர்கள்
இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிபர் என மூன்று வகையினர்.
இவ்வகையிலே மூன்றாவது வகையினர்.
அளவில் செல்வம்
- உலகச் செல்வம் சிவனடிமைத் திறத்தில்
ஒழுகாதவிடத்திற் செல்வமாகாது; இன்னலுக்கே யேதுவாகும், ஆதலின்
இதனையடுத்துச் செக்கர்....மிக்கவர் என உடன் சேர்த்துக் கூறினார்.
அடியாரிடத்து அன்பு செய்யாக்கால் “ஈசனுக் கன்பிலார் அடியவர்க்கன்
பில்லார்“ - (சிவஞான சித்தியர் 12-ம் சூத்திரம் - 2) என்றபடி ஈசனிடத்தும்
அன்பு இல்லையாய் முடியும்; ஆதலின் அடியார்பா லன்பும் அடுத்து
வைத்தோதினார்.
செல்வத்து வளமையினமைந்தார்
- செல்வங்களின்
எல்லாவகையும் தொகையும் அடங்கச் செல்வத்தினமைந்தார்
என்றதனோடமையாது வளமையின் என்றார். செல்வம் படைத்தோர்க்கு
அடிமைத்திறம் அமைதல் அருமையாதலின் இதனை முன்னர்க் கூறினார்.
அமைந்தாராயினு மிக்கவர் என்க.
செக்கர்
- சிவந்த அந்திமாலை. அது செக்கரிற்றோன்றும்
வெள்ளிய பிறை எனவும், செக்கரே போலும் வெண்பிறை கூடிய சடை
எனவும் இருவழியும் கூட்டி உரைக்க நின்றது. “மாலையின், றாங்குருவே
போலுஞ் சடைக்கற்றை“ என்பது அற்புதத்திருவந்தாதி (65).
அடிமைத்திறத்தின்
1303 மிக்கவர்
- இவ்வாறு மிக்க வகையை மேலே முன்
கொடுக்கு மியல்பினின்றவர் என விரித்துக் கூறினார்.
மறைச் சிலம்படியார்
- வேதங்களே இறைவன் பாதங்களிற்
சிலம்புகளாக ஒலிப்பன என்பது வழக்கு. வேதங்கள்
இறைவனிலக்கணங்களையே தம்முட் கொண்டு ஒலிப்பன என்பது
கருத்து. சிலம்படியாரது சீரடியார்கள் - என ஆறாம் வேற்றுமை யுருபு
விரித்துரைக்க.
யாவரேனும்
- குலம், குறி, குணம் முதலிய பேதங்காணாது
பொது வகையால் எல்லா அடியாரிடமும் செல்லும் அன்புபற்றி
முற்றும்மை தந்து யாரேனும் என்றார்.
“எவரேனுந்
தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா
லுள்கி“ |
என்பது திருத்தாண்டகம்.
“நலமில
ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாக“ என்றும் |
“கணங்களாய்
வரினுந் தமியராய் வரினும் மடியவர் தங்களைக்
கண்டாற்
குணங்கொடு பணியும்“ என்றும், |
|