| அமர்நீதி நாயனார் புராணம் | 645 |
Periya Puranam
மனத்தினும்
- மனம் மலர்தலைக்
காட்டிலும். உம்மை உயர்வு சிறப்பு.
மிக - மலரும் செயலில் மிகும்படியாக. முகம்
தன்னை மலரச்செய்த
மனத்தினைவிடத் தான் மிக்கிருக்கவேண்டுமென்று மலர்ந்தது என்க.
அகத்தின் அழகு முகத்திற் றெரியும் என்பது பழமொழி.
கடிது எதிர் வந்து வணங்கி
என்று மாற்றுக. இவை மனமகிழ்ந்து
உபசாரத்தின் குறிகள். மனத்தினும் - வணங்கி என்றனர்
- என்றவற்றால்
முறையே மனம்,மெய், மொழியாகிய முக்கரணங்களாலும் இறைவனாகிய
பிரமசாரியை நாயனார் வழிபட்டமை கூறப்பெற்றது காண்க.
இம்மடத்தினில்.....செய்தது
- இம்மடத்தினிற் காணும்படியிலாத நீர்
என்றது இதுவரை உம்மைப்போன்றார் ஒருவரும் இம்மடத்தினில்
வரக்கண்டதில்லை என்றதாம். தேவரீர் எழுந்தருளும் பெருமைக்கு இம்மடம்
தகுதியுள்ளதன்று என்றதுமாம். இதுவரை அடியார்களுட்கலந்து நின்று
வருதலேயன்றி இவ்வாறு வெளியாகக் காணும்படி வரவில்லை என்ற
உண்மையின் குறிப்புமாம். 443 - 444 உரை பார்க்க. அணைய
-
அடியார்களுள்ளே கலந்து வந்தது போய்,வெளிப்பட்டு அணைய. அணைய
- அணைவதற்குக் காரணமாக. பயில் தவம் - பயிலத்தக்க
- இதற்கென்று
பயிலுமாறு நூல்களில் விதித்த - தவம். செய்த பயில் தவம்
என்னோ?
என மாற்றிக் கூட்டுக. 408 காண்க. முன்செய்த நற்றவங் காரணமாகவல்லாது
பெரியவர் வரும் பேறு கிடைக்காதென்ற நியதி குறித்தது.
மிகமுக
- என்பதும் பாடம். 10
பிரமசாரியின் வடிவாகி - திருமுடிச் சிகையும் - நீற்றுத்
தழைப்பும் -
நூலுடன் மான்றோலும் - பவித்திரமும் - கோவண ஆடையின் றசைவும்
(கொண்டு) அடிமலர் - நிலம் பொலிய - வந்து - திருமடங் குறுக. (அவ்)
வடிவு காண்டலும் - மலர்ந்து- எதிர் வந்து வணங்கி - பயில்தவம் என்னோ
அடியனேன் செய்தது? என்றனர் அன்பர் - என இவ்வைந்து
பாட்டுக்களையுந் தொடர்ந்துமுடிக்க.
| 512.
|
பேணு
மன்பரை நோக்கிநீர் பெருகிய அடியார்க் |
|
| |
கூணு
மேன்மையி லூட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவண மீதலகேட்
டும்மைக்
காண வந்தன மென்றனன் கண்ணுதற்
கரந்தோன். |
11 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு வழிபடும் அன்பரை நோக்கி, நீர்,
(அன்பினாற்)பெருகிய அடியவர்களுக்கு மேன்மையில் உணவும் ஊட்டிக்,
கந்தை - கீள் - உடை ஆகிய இவைகளையும், புதிய வெள்ளிய உயர்ந்த
கோவணங்களையும் கொடுத்தல் கேட்டு உம்மைக் காணவந்தோம் என்று
நெற்றிக்கண்ணை மறைத்து வந்தஇறைவர் சொன்னார்.
(வி-ரை.)
பேணும் - வழிபடுகின்ற. பேணியநற்
பிறைதவழ்செஞ்
சடையினானை - (திருவாவடுதுறை - திருத்தாண்டகம்), பேணித்
தொழுமவர் பொன்னுலகாள - (திருவையாறு - திருவிருத்தம்) என்ற
தேவாரங்கள் காண்க. முன்னர் அருள்பேணி (506) என்றதுங் குறிக்க.
பெருகிய - ஒரு அடியாருக்கு இடம், உணவு,
உடை முதலிய எல்லாம்
உதவுதல் கேட்டுப் பல அடியார்களும் அணைவார்க ளாயினமையால்
அளவினிற் பெருகிய என்றலுமாம். ஆளு நாயக ரன்ப ரானவ ரளவி லாருள
மகிழவே (444).
மேன்மையில் ஊட்டி
- மேன்மையாக ஊட்டுவித்து.
மேன்மையில் ஊணும்
என்று கூட்டி உணவின் சிறப்புரைத்ததாகக்
கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும், உணவின் சிறப்பும் 442, 443
திருப்பாட்டுக்களிற் பார்க்க. ஊட்டி - ஊண்பித்து.
தாய் குழந்தையை
ஊட்டுவதுபோலக்.
|
|
|
|