கை தடுக்கப்படுதல்
வேண்டுமாதலின் திருக்கை பிடித்துக்கொண்டது.
அற்றாயின் கையினாற் பிடித்தாலே போதும் வாக்கு எதற்கு என்னில்
அவர்க்குப் பொருள் அறிவித்து அமுதமாக்குதற்கு வாக்கு வேண்டப்
படுமென்க. இதுபற்றியே "இன்னுயிரை யதனொடு மெழிற்சிவ லிங்கந்
தன்னிடைப் பிறந்த தட மலர்க் கையால்" என்றருளியது திருமறம்.
கண்ணப்பரது தீவிரதரச் செயல் நோக்கி இரண்டும் வேண்டப்பட்டன
என்றலுமாம். "உற்றுமுன் பிடித்த" என மேல்வரும் பாட்டிற் கூறியதும்
காண்க.
இடக்கும்கையை
- இடப்பதற்குத் துணிந்து அம்பினைக் கண்ணில்
ஊன்றிய கையை. தடுக்க - தடுத்தல், அது முயன்றபடி கண்ணைத்
தோண்டாதவாறு அதனைப் பிடித்துக் கொள்ளுதல்.
நாககங்கணர்
- அமுதவாக்கு - மரணத்தை விளைவிக்கும்
விடமுள்ள நாகம் கையிற் கங்கணமாக அமையினும் வாக்கு அதனை நீக்கும்
அமுதமாம் என்றபடி. அமுத வாக்கு - இறத்தலும்
மீளவும் பிறத்தலுமின்றி
மீளாநெறியாகிய முத்தியின் பத்திற் கண்ணப்பரை "என் வலத்தில் நிற்க"
என்று இதனையடுத்து இப்போது இருத்துவதாகலின் இவ்வாறு கூறினார்.
அமுதம் - இறவாத இன்பமுத்தி.
அன்பர் தங்கண் - தடுக்குமுன்.....என்றே - தடுக்கமுன்.........
என்றே - என்பனவும் பாடங்கள். 178
828.
|
கானவர்
பெருமா னார்தங் கண்ணிடந் தப்பும் போது
மூனமு துகந்த வைய ருற்றுமுன் பிடிக்கும் போது
ஞானமா முனிவர் கண்டார்; நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைக ளார்ப்ப. |
179 |
(இ-ள்.)
வெளிப்படை வேடர் தலைவராகிய கண்ணப்பர் தமது
கண்ணைத் தோண்டித் தேவர்கண்ணில் அப்பிய காலத்தும், அவர் ஊட்டிய
ஊனமுதை உவந்து - கொண்டருளிய ஐயராகிய காளத்திநாதர் அவர்
மற்றைக் கண்ணைத் தோண்டும் கையைத் தோண்டும் முன்பே பொருந்திப்
பிடித்த காலத்தும், ஞானப்பெரு முனிவராகிய சிவகோசரியார் கண்டனர்.
வேதங்கள் ஆர்த்துப் பிரமதேவர் முதலிய தேவர்கள் கற்பகப் புதுமலர்
மழை பொழிந்தனர். 179
(வி-ரை.)
கண்இடந்து அப்பும் போதும் - முதலில் வலக்கண்ணைத்
தோண்டி அப்பிய காலத்தும். இடக்கண்ணை என்ற சுப்பராய செட்டியாருரை
பிழைபோலும்.
முன்
உற்றுப் பிடிக்கும் போதும் என மாற்றுக. உம்மைகள்
எண்ணின்கண் வந்தன. அப்பியது முன்னும் பிடித்தது. பின்னும் நிகழ்ந்தன.
அப்பின என்னாது அப்பும்போதும் என்றதனால்
அதுபற்றியே
முன்நிகழ்ச்சிகளையும், இவையிரண்டுங் கூறவே இடைப்பட்ட எல்லா
நிகழ்ச்சிகளையும் கண்டார் என்பது. ஊனமுதுவந்த என்ற குறிப்புமது.
ஊன்
அமுது உவந்த ஐயர் - தள்ளத்தக்க ஊனைக் கொள்ளத்தக்க
அமுதமாக மிக மகிழ்ந்துகொண்ட பெருமை யுடையாராதலின் அதனைத்
தொடர்ந்தே அவ்வூனைப் பெற்றும் சமைத்தும் ஊட்டியும் தொழில் செய்த
கையினைப் பிடித்துக் கொண்டனர் என்பது தொனிக்கின்றது காண்க.
"கானவூ னமுத மாக்கும் சிலை" (681) என இதனை முன்னர்க் குறிப்பிட்டதும்
கருதத்தக்கது.
ஞானமா
முனிவர் - சிவஞானமுடைய பெருமுனிவர். சிவகோசரியார்.
முன்னர் - "மாமுனிவர்" (801) என்றார். இங்கு இறைவனருளினாற் காட்டவும்
உணர்த்தவும்பட்ட ஞானத்தைப் பெற்றவர் என்பார் "ஞானமாமுனிவர்"
என்றார்.
கண்டார் - செயல் காட்டக் காண்கின்றாய் (807) என்றதனால்,
செயல்களின் மூலம் பரிவைக் காட்டுவிக்க அச்செயல்களையும் கண்டார்;
அவற்றால் அறியப்படும்
|