என்பன நாயனாரையும்,
கலிக்காமனாரையும்; நகிற்கொடி, சாயல்
மயிலனையார் நாயனாரின் மகளாரையும் குறிப்பாலுணர்த்துவதும் காண்க.
கனைசாறு
- கஞ்சாறு - சொல்லணி. 866 பார்க்க. கஞ்சாறு
-
ஊர்ப்பெயர். தேவார ஆட்சி போற்றப்பட்டது. தலவிசேடம் பார்க்க.
வழிவந்து
- புனைமுழவம் - என்பனவும் பாடங்கள். 6
872. |
அப்பதியிற்
குலப்பதியா யரசர்சே னாபதியாஞ்
செப்பவருங் குடிவிளங்கத் திருவவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை யறிந்துணர்ந்தார் விழுமியவே
ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7
|
(இ-ள்.) மெய்ப்பொருளை............மானக்கஞ்சாறனார் - உண்மைப்
பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து உணர்வினிற்
கொண்டவரும், தூய வேளாள மரபின் சேமவைப்புப்போன்ற
மேன்மையுடையவருமாகிய மானக்கஞ்சாறனார்; அப்பதியில்........அவதாரஞ்
செய்தார் - அந்தத் தலத்தில் வழிவழி வாழ்கின்ற மேம்பாடுடையவராய்
அரசரது சேனாபதியாகிய சுட்டிக் கூறத்தக்க குடிவிளங்கும்படி திருவவதாரஞ்
செய்தனர்.
(வி-ரை.)
இப்பாட்டினால் நாயனாரது மரபும், மரபின் உட்குடியும்,
உள்ள நிறைவும், வழிவழி வாழ்க்கையும் முதலிய சிறப்புக்கள் பலவும்
ஒருங்கு பேசப்பட்டன.
மெய்ப்பொருள்
- மெய்ப்பொருணாயனார் புராணமும், 481 - ல்
உரைத்தவையும் பார்க்க.
அறிந்து
உணர்ந்தார் - அறிதல் - உணர்தல் - இவை வெவ்வேறு
உணர்ச்சி நிலை குறித்தன. அறிந்து என்றதனாற்
கேட்டலும் சிந்தத்தலும்,
உணர்ந்து என்றதனாற் தெளிதலும் நிட்டை
கூடலும் உணர்த்தப்பட்டன.
மெய்ப்பொருளானது ஞானேந்திரிய அறிவு அந்தக்கரண அறிவு என்னும்
பாசவறிவினாலும், உயிரறிவு எனப்படும் பசு அறிவினாலும் அறியப்படாதாயும்,
சிவஞானமாகிய மெய்யுணர்ச்சியால் மட்டும் அறியப்படுவதாயும் உள்ள
பொருளென்பது இங்குக் குறிக்கப்பட்டது.
அப்பதியில்
குலப்பதி - அவ்வூரில் வழிவழி நிலைத்த குடிகளுள்
முதன்மையுடையவர். இக்காரணம்பற்றியே முதன்மையார், முதலியார் என்ற
குடிப்பெயர்கள் போந்தன என்ப. இவர்களுக்கு ஊராண்மை நாட்டாண்மை
முதலிய ஊர் முதன்மைப் பட்டப் பெயர்களும் வழங்கும். இவர்களின்
குடிச்சிறப்புக்களை ஆசிரியர் பல இடத்தும் விதந்து பேசுதலும், உமாபதி
சிவாசாரியார் திருத்தொண்டர் புராண வரலாற்றினுட் பாராட்டியிருத்தலும்
காண்க.
அரசர்
சேனாபதியும் செப்பவருங் குடி - அரசரிடத்துச்
சேனாபதியாகும் தொழிலும் வேளாளர்க்கு உரியது. இது இவர்களுட் சில
குடிகளில் வழிவழியாய் வருவதொன்றாதலின் இவ்வாறு கூறினார்.
இந்நாயனாரது மகளாரை மணம் புரியவந்த எயர்கோனாரும் இதுபோலவே
சேனாபதிக்குடியினில் வந்தவர் என்பது "ஓங்குகுல மரபினராய்" (881),
"எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயுமென" (882) என்றவற்றாலும்,
ஏயர்கோனார் புராணத்தினுள் "ஏயர்கோக்குடிதான்", "மன்னிநீடிய வளவர்
சேனாபதிக்குடியாம்" (5) என்று கூறுவதனாலும் விளங்கும்.
திலகவதியம்மையாருக்கு மணம்பேசிய கலிப்பகையாரும் அரசர்
சேனாபதியாராகப் போர்புரிந்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட
சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. இதனை "வேந்து விடுதொழிலிற்
படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வர்பெறும் பொருளே" (பொருள் -
மரபு - 81) என்ற தொல்காப்பியத்துள்ளும் காண்க.
|