மேல்வரும் பாட்டில்
கழுத்தளவாகிய நீரினுட்புக்குக் கை உச்சிமேற்
குவித்து நின்று உருத்திரம் கணிக்கும் பசுபதியாரையும் இவ்வுவமம்
குறிப்பாலுணர்த்துவது காண்க. அவ்வாறு நீரினுள் நின்று கணிக்கும் நீர்மை
(தன்மை)யினின்று எரியுருவாகிய இறைவனருகே இருக்கும் நிலை எழுந்தது
என்ற சரிதக்குறிப்பும் காண்க. பொய்கை-
தெய்வத் தீர்த்தம்; மானிடராக்காத
நீர்நிலை என்பர் நச்சினார்க்கினியர். புண்ணியப் பொய்கையையடைந்து
கணித்தனர் என்பதாம்.
பொய்கையுள்
மேவி - புக்கு - நின்று - குவித்து - அன்பினில் -
உருத்திரம் - குறிப்பொடு - பயின்றார் என இந்த இரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக்கொள்க.
பெருவரால்
- நிரை நெடுங்கய நீரிடை - என்பனவும் பாடங்கள். 5
1036.
(வி-ரை.) தெள்ளுதண்புனல்
- தெள்ளுதல் - தெளிதல்.
தெளிந்தபுனல். தெளிவுடைமை நல்ல புனலுக்குரிய இயல்பு. தெளிவிக்கும்
புனல் என்று பிறவினையாகக் கொண்டுரைப்பினு மமையும். இது கயத்தின்
உயர்வு குறித்தது. இந்நாண்மாக்களைப் போலக் கயத்தினை
அசுத்தப்படுத்தாமல் மக்கள் தூய்மையாய் வைத்திருந்தனர் என்பதும்
புலப்படும். தாமரையும் வரால் கயல் முதலியனவும் இருத்தலும் அதன்
றூய்மைக் குதவிசெய்வன என்க.
புனல்
- கழுத்து அளவு - ஆய் இடைச் செறிய - உள்உறப்
புக்கு - நின்று - இது பசுபதியார் புனலுள்
நின்று செபித்தநிலை. கரிமா
முதலிய யோகசித்தியால் அன்றி,இவ்வாறு கழுத்தளவு நீரினுள் நிற்பது
இயலாது. மனித உடல் நீரினும் கனங் குறைந்ததாதலின் இடுப்பின்
அளவுக்குமேல் நீரினுள் நிற்பது இயல்பிற் கூடாததாம். உடலினும்
கனமுடைய நீர் கீழும் நாற்புறமும் செறிந்து உடலை மேலே
தூக்கிவிடுமாயினும் அவ்வாறு மேற்கிளம்பாமல் நீரின் செறிவினையும்
வென்று நின்றார் என்பது குறிக்கப் புனல்
ஆய் இடைச் செறிய என்று
கூறி இச்செயலின் அருமைப் பாட்டினை எடுத்துக் காட்டினார். சிலர்
நீர்த்தம்பன சாதனையால் நீர்மேல் மிதந்து கட்டைபோற் கிடப்பதும்
பேசுவதும் செய்வர். ஆனால் கழுத்தளவு ஆழத்துள் நின்று அன்பொடு
தொடர்ந்து மனத்தையும் ஒருமைப்பட நிறுத்தி அல்லும்பகலும் உருத்திரம்
பயிலுதல் செய்தற்கரிய பெருஞ் செயலாம்.
கை
உச்சிமேல் குவித்து - என்றதனால் "கைகாள் கூப்பித் தொழீர்"
என்றபடி இறைவனை வணங்குதற்குக் கைகள் இங்குப் பயன்பட்டன என்றும்,
உடலை நீரினுள் நிறுத்துதல் முதலிய வேறொன்றற்கும் அவற்றைப்
பயன்படுத்தவில்லை என்றும் கூறியபடி. கை - குவித்து
என்றதனால்
இரண்டு கைகளும் என்க.
தள்ளு
- திரை - நீர் - ததும்பிய- இறைவனது சடையினுள்ளே
குடிகொண்டிருந்தும் கீழே ஓடிவருவதற்குக் காரணங் குறிப்பார்போன்று
அலைகளாற் றள்ளப்பட்ட நீர் கரையின்மேல் ததும்பியது என்றார்.
சடையார்
கொள்ளும் அன்பு - சடையார் உகந்துகொள்வது அன்பு
ஒன்றுமேயாம் என்பது நூற்றுணிபு "அன்ப ராயிருப் பாரை யறிவரே," "உள்ள
முள்கலந் தேத்தவல் லார்க்கலாற், கள்ள முள்ள வழிக்கசி வானலன்", "அன்பு
நுகர்ந் தருளுதற்குச் சித்தமகிழ் வயிரவராய்த் திருமலை நின் றணைகின்றார்"
(சிறுத் - புரா - 25) முதலிய திருவாக்குக்கள்
காண்க.
குறிப்பொடு
பயின்றார் - குறிப்பு- தலைவராகிய
பதிப்பொருளுக்குப் பசுக்களாகிய உயிர்கள் யாவையும் எஞ்ஞான்றும்
அடிமைகளே என்பதும், அவ்வடிமைத்திறத்தினிற் செல்லவொட்டாது
இடைவிலக்கும் பாசங்களின் நீங்கி அடிமைசெயப் பெறுதல்
|