அறியும்படி செய்தோம்,
நீயும், இனி நீடிய நமது நிலைபெற்ற உலகிலே
பிரியாமல் இருப்பாயாக" என்று அருளிச் செய்து, அந்நிலையினின்றும்
எழுந்தருளி அழகிய திருஏகாம்பரத்தில் அணைந்தனர்.
(வி-ரை.)
முன்னவரை - தமது முன்நின்ற அத்திருத்தொண்டரை.
"தொழுது முன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்,
தெளித்துச்
சுவையமு தூட்டியமரர்கள் சூழிருப்ப, அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்"
(ஐயாறு 7) என்ற திருவிருத்தச் சொல்லும் பொருளும் இங்கு நினைவு
கூர்தற்பாலன. முன்னவர் - முதன்மை பெற்றவர்
என்றலுமாம்.
முக்கண்ணர்
நேர் நோக்கி - நோக்குதற்குக் கண் கருவியாதலின்
இங்கு முக்கண்ணர் என்ற பெயராற் கூறினார்.
செய்தற்கரிய பெருஞ்செயல்
செய்த தொண்டனாரைத் தமக்கியல்பாக உரிய மூன்று கண்களாலும்
முழுஅருளினோக்கமும் செய்தனர் என்பது குறிப்பு. நேர் நோக்கி
- என்ற
குறிப்புமது. மூன்றாவது கண் நெருப்புக்கண் எனவும் மன்மதனை எரித்த
பார்வையுடையதெனவும் படுமாதலின், அவ்வாறன்றி, அருளின் நேர்பட
நோக்கினார் என்பது. "செற்றங்கருங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவ,
னெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" (கோயில் -
திருவிருத்தம் -8) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும் இக்கருத்தைப்
புலப்படுத்தி நிற்பது காண்க. மூவுலகும் நின் நிலைமை அறிவித்தோம் -
அறிவித்தற்காகவே இவ்வருட் செயல் செய்தோம் என்பது. "அந்நிலைமை
கண்டன்பர்க் கருள்புரிவான்" (1192) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
நீயும்
வைகுவாய் - நீயும் - நாமும் அறிவித்தோம் நீயும் வைகுவாய்
என எண்ணும்மை. அசை என்றலுமாம்
நீடிய
நம் மன் உலகு - சிவனுலகம், நீடிய உலகு - மன் உலகு
என்க.
நீடுதல் - எங்கும் பரவியிருத்தல்; மன்னுதல்
என்றும் அழியாதிருத்தல்.
மன்னி நீடிய என்று ஒருபொருளாகக் கொண்டுரைத்தலுமாம். நீடிய
- என்ற
தனைச் செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, நீடிய
வைகுவாய் என்று கூட்டி, நிலைபெற்றிருக்கும் பொருட்டு நம்முலகில்
இருப்பாய் என்றுரைப்பினுமமையும். மன் - அரசு என்று கொண்டு
எல்லாவற்றுக்கும் மேலாய் அரசாங்கத்தமர்ந்த உலகம் என்றலும் பொருந்தும்.
"நிலமிசை நீடு வாழ்வார்" என்ற திருக்குறட் கருத்தும் காண்க.
அந்நிலையே
- வெளிநின்ற அந்நிலையினின்றே.
எழுந்தருளி
ஏகாம்பரம் அணைதல் - வெளிப்படத் தோன்றிய
நிலையினின்றும் எங்கும் நிறைந்த (வியாபக) நிலையினுள் மறைதல்.
"பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பல மணைந்தார்" (648) முதலியவை
பார்க்க. "வளைத்தழும்பர் மலர்ச் செங்கை" (1202) என்றதும் காண்க. "அணி
ஏகாம்பரம்" என்றார் காஞ்சிபுரமாதலின். எழுந்தருளி
- மறைந்து. சைவமரபு
வழக்கு. 127
1205. |
சீர்நிலவு
திருக்குறிப்புத் தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதா ளறவெறிந்தார் பரிசுரைக்கேன்;
பேரருளின் மெய்த்தொண்டர் "பித்த" னெனப் பிதற்றுதலா
லாருலகி லிதனுண்மை யறிந்துரைக்க விசைந்தெழுவார்? |
128
|
(இ-ள்.)
வெளிப்படை.
சிறப்பு நிலவப்பெற்ற திருக்குறிப்புத் தொண்ட
நாயனாருடைய திருத்தொழிலைத் துதித்து, உலகம் விளங்கும்படி தந்தையின்
தாள்கள்
|