பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்777

 

வனையும் தொண்டு ஆளும் - ஏவல் கொள்ளவல்ல - தொண்டர்
என்றுரைப்பாருமுண்டு. ஆளுடைய நம்பிகளுக்கு சோறு இரந்து கொடுத்தது
முதலிய அருள் நிகழ்ச்சிகளை இங்கு எடுத்துக் காட்டுவர்.

     தொண்டு ஆளும் - தொண்டுசெய்யும் பேறுதந்து ஆளுகின்ற
பெருமையுடைய.

     அடித்தொண்டர் - மற்றொரு பற்றுமின்றி அவனது திருவடியே
பற்றுக்கோடாகக் கொண்ட அடியார். "திருவடி மறவாப் பான்மையோர்"
எனுங் குறிப்பினின்றவர். தகுதி யில்லாரையும் ஆளும் பேரருளுடையான்
றிருவடி பிடித்தாராதலின் இவர்களும் தம்மையடைந்த, தகுதியில்லாதாரையும்
உருப்படுத்தி உய்விப்பர் என்பது கருத்து.

     தொண்டர்க்கு ஆக்குவார் - வளங்களை அவர்க்கே பயன்படுமாறு
உய்ப்பவர்.

     மேற்பாட்டில் நாயனாரது சரித இயல்கூறிய ஆசிரியர் இப்பாட்டில்
அவரது நியதியான ஒழுக்க இயல் கூறினார். 4

612.
நள்ளார் களும்போற்று நன்மைத் துறையின்க
ணெள்ளாத செய்கை யியல்பி னொழுகுநாட்
டள்ளாத தங்க டொழிலுரிமைத் தாயத்தி
னுள்ளா னதிசூர னென்பா னுளனானான்.    5

     (இ-ள்.) வெளிப்படை. பகைவர்களும் பாராட்டும்படியான
நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில்
இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி பிணைந்துள்ள
தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய் அதிசூரன் எனப்படுவா
னொருவனிருந்தான்.

     (வி-ரை.) நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை -
நன்மைத்துறையாதலின் பகைவர்களும் போற்றினார்கள். பகைவராலும்
பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை யொழுக்கம் சென்றது
என்பதாம். நள்ளார் - இவர்பால் வாள்விஞ்சை பயின்ற அரசரால்
வெல்லப்பட்டோரும் வெல்லப்பட நின்றோரும் ஆகிய பகைவர். போற்றும்
பாராட்டும் வகையால் பகைத்திறம் ஒழிந்து உய்யும். இவர் அன்பர் ஆதலின்
இவர் எவரையும் நள்ளாராகக் கொண்டாரலர். இவர் பாற் படைபயின்ற
அரசர்க்கே அரசகாரியத்தில் நள்ளார் உளராவர் என்க. அங்ஙனமாயினும்
ஒருவன் தாயபாகப் பொறாமை கருதி இவர்பால் ஏலா இகல்புரிவானாயினான்
எனச் சரிதந் தொடங்கிச் செல்லுமுகத்தால் ப்பாட்டில் இவரது இயல்பு
ஒழுக்கங்கூறி அவ்விகல் கொண்டோனையும்

உடன் கூறிய உள்ளுறை காண்க. "புல்லாதார் முரணடக்கிப் பொருள்
கவர்வாரென்பதெவன்?, செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை,
வல்லாருந் தத்தமதேத் தரிய பொருள் வரவிடுத்து, நல்லாரா யொப்புரவு
நட்படைய நடக்கின்றார்" (திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்) என்ற
திருவிளையாடற் புராணக்கருத்தை இங்கு வைத்துக் காண்க. உம்மை
உயர்வு சிறப்பு.

     நள்ளார்களும் போற்றுதல் பகைமை பற்றி யிகழாது, நெறிவழுவாது
நிற்கும் தன்மை நோக்கிப் புகழ்தல். நன்மைத்துறை - நல்லொழுக்கம் -
திருநீற்றினன்பு. எள்ளாதசெய்கை இயல்பு - என்றும் கைவிடா தொழுகும்
தன்மை. இயல்பு - அவர் நினைந்து மேற்கொள்ள வேண்டுவதொன்றன்று -
இஃதவரியற் கையேயாம் என்னும்படி. விபூதியைப் பாதுகாக்கு நன்னெறியில்
நூல்களால் இகழப் படாத திருத்தொண்டினை நூலாராய்ச்சியின்றி
யியற்கையாகவே கொண்டொழுகுகின்ற - என்பது இராமநாத செட்டியார்
உரைக் குறிப்பு.

     தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயம் - விலக்க முடியாத
வண்ணம் தமது தொழிலின் உரிமை பெற்ற தாயபாக முடையவன்.
தாயத்தின் உள்ளான்
-