பக்கம் எண் :

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

  பெரிய புராணம்
  என்னும்
  திருத்தொண்டர் புராணம்
 

இரண்டாங்காண்டம்

 

ஆறாவது
வம்பறா வரிவண்டுச் சருக்கம் - II

 

திருச்சிற்றம்பலம்

 
வம்பறா வரிவண்டு மணநாற மலரு
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்;
ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்;
நம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியேன்;
நாட்டமிகு தண்டிக்கு மூர்க்கர்க்கு மடியேன்;
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே;
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
 

திருச்சிற்றம்பலம்

 

- திருத்தொண்டத்தொகை (5)