| உ சிவமயம் |
| 28. திருஞானசம்பந்த நாயனார் புராணம் |
| தொடர்ச்சி |
| அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை யாக்கியமண் கணங்கழு வேற்றிக் கருவிடந் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின வெண்பிறையோ டிணங்கிய மாடச் சிரபுரத் தான்ற னிருந்தமிழே. | |
|
| -(39) |
| காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபனல்லூர்ச் சீரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார் ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ் வரும்பதமே. . | |
|
| -(60) |
| - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி |
| பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனுந் தோற்றோனி கண்டீர் - நிறையுலகிற் போன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் றன்மாலை ஞானத் தமிழ். | |
|
| -(11) |
| - ஆளுடைய பிள்ளையார் திருழம்மணிக் கோவை - மேற்படி |
| ஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப் பாடல் பனைதாளம் பாலைநெய்தல்-ஏடெதிர்வெப் பென்புக் குயிர்கொடுத்த லீங்கிவைதா மோங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல்" | |
|
| -(70) |
| -திருக்களிற்றுப்படியார் |
| புராணம் (தொடர்ச்சி) |
| [மங்கையர்க்கரசி யம்மையாரும் குலச்சிறை நாயனாரும் விடுத்த விண்ணப்பத்துக்கிணங்கி, ஆளுடைய பிள்ளையார் சமணசமய நிராகரிப்பும் சைவ ஆக்கமும் கருதித் திருமறைக்காட்டி னின்றும் பாண்டி நாட்டுக்குத் திருவருள் வழியே எழுந்தருளி வருகின்றார். அப்போது சமணர்க்கு மேல் வரும் கெடுதியைக் குறிக்கும் தீக்கனாக்களும் துன்னிமித்தங்களும் நிகழ்ந்தன.] |
2531 | பீலியுந் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் கால்களுந் தடுமா றாடிக், கண்களு மிடமே யாடி, மேல்வரு மழிவுக் காக வேறுகா ரணமுங் காணார் மாலுழந் தறிவு கெட்டு மயங்கின சமண ரெல்லாம். | |
| 633 |
| (இ-ள்) ; பீலியும் ...வீழ - மயிற்பீலிக் கற்றையும், தடுக்கும், பாயும் அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழவும்; கால்களும் |