2 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| | | வகை:- "கொற்றத்திறல்.....தவிர்ப்பான்" என்று - இது கலிக்காமனார்உடைவாள் கொண்டு தம் வயிற்றிடைக் குத்திக்கொள்வதன் முன் கூறிய வஞ்சின மொழி. "வெற்றியினையும் வலிமையினையு முடைய எந்தையும் அவரது தந்தையும் அவரது தந்தையும் அவர்களையன்றி எங்கள் கூட்டமெல்லாமும் துன்றச் சடையினை உடைய பெருமானே! உனது அடியேம். அவ்வாறிருக்கவும் தேவரீர்வலிய ஆட்கொண்ட வன்றொண்டனோ எனது இந்தப் பிணியினை தவிர்ப்பவன் என்று கூற உடைவாளை உருவி வயிற்றினைக் கீறி நோயினைத் தவிர்த்துக் கொண்டவர்கலிக்காமனாராவர். அவரது திருமரபு ஏயர்களது சிறப்புடைய குடியாகும். ‘ஏகாரம் - ஈற்றசை.' | | தந்தை...அடியேம் - இக்கருத்தை விரிநூல் "எம்பிரா னெந்தை தந்தை (ஏயர்- புரா. 392 = 3546) என்ற பாட்டில் ஆசிரியர்எடுத்து விரிவுரை செய்தல் காண்க; திகழ்வன்றொண்டனே - நாங்கள் வழி வழி அடியோம் என்று விடாது பற்றி நிற்க, ஆளல்லேன் என்று சொல்லி மறுத்தவரை வலிய ஆண்ட ஒருவர்என்ற குறிப்புப் பற்றி நின்றது; மற்று இப்பிணி - பிணி வருதற்கு மற்று இயையில்லையேனும் அருளால் வந்தது என்பது குறிப்பு. தெற்ற - நெருங்க; தேற்றம் என்பது தெற்றம் என நின்றதென்றலுமாம். தவிர் - உயிரினையும் துறந்த; உயிர் என்பது அவாய் நிலையான் வந்தது. பகைதவிர் என்ற குறிப்புமாம். | | பெயரும் குடியும் பண்பும் தொகைநூல் பேசிற்று. அவற்றோடு அடிமைத்திறத்தின் உறைத்த பண்பும், சரித வரலாறும் வகை நூல் உரைத்தது. இவை விரிந்த வகை விரிநூலுட் கண்டுகொள்க. | | இனி, இப்புராணத்தை 409 திருப்பாட்டுக்களாற் கூறுகின்றார்ஆசிரியர். அவற்றுள் 1 - 8 வரை திருப்பாட்டுக்களில் ஏயர்கோன் கலிக்காமனாரது நாடு - நகரம் - குடி - குலம் - அடிமை - பண்பு முதலிய சிறப்புக்களையும் ஆளுடைய நம்பிகள் சிவபெருமானைத் தூதுவிட்டதனுக்குச் சினந்து இழிப்ப வந்த செயலையும் கூறியருள்கின்றார். அதன்மேல் 9 - 382 பாட்டுவரையில் நம்பிகள் திருத்தொகையருளிய பின், பல தலங்களையும் வணங்கித் திருவொற்றியூர்சார்ந்து, "பிரியே"னென்று சபதம் செய்து, சங்கிலியாரை மணந்து, பின் திருவாரூரை நினைந்து சபதந் தவறியமையாற் கண் மறையப்பெற்று, வரும் வழியில் காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்றுத், திருவாரூர்சேர்ந்து மற்றைக் கண்ணும்பெற்றுப், பரவையார்மாளிகையிற் செல்லவொட்டாமல் பரவையார்ஊடல் கொள்ள அதை நீங்க இறைவரைத் தூதுவிட்டு எழுந்தருளியிருந்தது வரை உள்ள வரலாறுகளைக் கூறுகின்றார். அதன் பின் 383 முதல் 409 வரை அச்செயல் பற்றி ஏயர்கோனார்சினந்து நம்பிகள்பால் பகைமை பூண்ட செயலையும், இறைவன் ஏவலால் சூலை நோயுற்றதும், அந்நோய் நீக்க நம்பிகளை இறைவர்ஏவ, அது தெரிந்து, ஏயர்கோனார்வயிற்றிடை உடைவாளாற் குத்திக் கொண்டு நோயும் உயிரும் தீரக் கிடந்ததையும், அது கண்ட நம்பிகள் தாமும் அவ்வுடைவாளினால் உயிர்துறக்கத் துணிந்தபோது இறைவரருளால் கலிக்காமனார் உயிர் பெற்றெழுந்து உடைவாளைப் பற்றிக்கொள்ள, இருவரும் நண்புரிமை பெற்ற நிலையினையும் கூறிச் சரித நிறைவாக்குகின்றார். இதனால் கலிக்காமனார் சரித அமைதியையும், நம்பிகள் சரிதம் முன்றொடர்ச்சி பெற்று, மேல், கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றிற்றொடர வரும் நிலையினையும் உணர்ந்து கொள்க. இதனை ஆசிரியர் 3162-ல் கூறுதல் காண்க. | | விரி:- 3155. (இ-ள்.) நீடு.....நாட்டிடை - நீடிய வண்மையுடைய சோழர்களது நீர்வளமுடைய நாட்டினிலே; நிலவு......கீழ்பால் - நிலவப் பெற்ற பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியினது வடகரையில் கிழக்குத் திசையிலே; ஆடு....நகர். |
|
|
|
|