[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 421 |
| வைத்த அழுந்திய அன்பொன்றே காரணமாய் நிகழ்ந்தமை குறிக்க; தொண்டின் றிறத்தில் நீடிய காலத்தால் மிகப் பழையதாகிய; இருவர் பாலும் நீடிய தொண்டு, நம்பிகள்பால் வழிவழி யடிமை செய்யும் வேதியர் என்றதும், "ஆளாயினி யல்லே னெனலாமே" என்றதும், கயிலையிலும் பணி செய்தமையும், காண்க; கலிக்காமனார்பால் "எந்தை தந்தை தந்தையெங் கூட்டமெல்லாம், தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை யென்னை" (3546) என்ற அவரது திருவாக்குக் காண்க. | | தம்முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் - ஒருவருள் ஒருவர் நட்புரிமையிற் பொருந்தும் தன்மையினை விளைவித்தல்; இருவரும் - இங்கு நம்பிகள் மட்டில், பிழையுடன்பட்டுக் கலிக்காமனார்பால் நட்புக் கொண்டனர்; கலிக்காமனார் நம்பிகள்பால் வெறுப்பும் சீற்றமும் கொண்டனர்; இவ்வாறு இருவருள் ஒருவர் மட்டிலன்றி இருவரும் என உம்மை முற்றும்மை, மேவும் - அன்புடன் கலந்திருக்கும். நீர்மை - தன்மையைத் திருவுளங்கொண்டு; கூடுதல் - ஒன்று சேர்தலை; புரிவார் - செய்ய விரும்புவாராகி; | | ஏயர் குரிசிலார்....வருந்துமாற்றால் - பிழை யுடன் பட்ட நம்பிகள்பால் அதனை மாற்றும் நிலை புரியாது கலிக்காமனார்பால் இறைவர் சூலை தந்து வருத்திய நிலை என்னையோ? எனின்,"ஆட்பா லவர்க் கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட் பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" (தேவா) என்பது திருஅருள் ஆணை; ஆதலின் அதுபற்றி நாம் ஆராய்தற்குரிய ரல்லோம். இனி, இதுவேயுமன்றி, இறைவர் தாமே சிவமும் சத்தியுமாயிருந்து எல்லாவுயிர்களுக்கும் போகங்களைக் கூட்டுவித்து நுகரச் செய்தருளிகின்றார்; போகங்கள் நுகர்தற்குரிய உடலையும் கரணங்களையும் போக பண்டங்களையும் தமது சத்தி கொண்டு தாமே கொடுத்தருளிப் போக நுகர்ச்சிக் கண்ணே துணையும் செய்கின்றார்;"போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார்" (சித்தி.1-70) என்று உடன் பாட்டிலும். "வில்லாடன் மார னிருப்பவும் யோகம் விளைத்த வந்நாட், புல்லா திருந்தன வெல்லா வயிருந்தம் போகத்தையே" என இறைவர் செயலன்றியில்லை என்று எதிர் மறையிலும் இவ்வுண்மைகள் பேசப்படுதல் காண்க; அகப்பொருளிலும், இயற்கைப் புணர்ச்சி என்ற பகுதியில்‘அன்ன மென்னடை யரிவையைத் தந்த, மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்துரைத்தது’ என்னும் கருத்துடைய "தெய்வத்தை மகிழ்ந்தது" என்ற துறையினை விளக்கும் "கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த, விளைவை யல்லால்விய வேனய வேன்றெய்வ மிக்கனவே" (6) என்ற திருக்கோவையாரும் காண்க; ஈண்டு நம்பிகள்பாற் பிரிவு புலவி - தூது முதலியவற்றால் வரும் துன்பம் உலகியல் நோக்கிற்கு அவ்வாறு காணப்படினும், உண்மை நிலையில் இடையறாத சிவயோக நெறி நின்ற அப்பரமாசாரியர்பால் அவை சாராத தன்மையும் நாம் மனங்கொள்ளத்தக்கதாம். கலிக்காமனார் அவைபற்றிச் செற்றங்கொண்ட நிலை அவற்றை உலகியல் வழக்கினளவில் வைத்துக் கண்டதனா லாகியதேயன்றி மற்றில்லை; "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே"(தேவா) என்றபடி இவ்வுண்மைகளைக் கலிக்காமனாருக்கு இறைவர் காட்டியருளுதலே இச்சரித நிகழ்ச்சியாம் என்க. ஆயின் இவ்வாறு காட்டி அறிவிக்கும் உபதேசம் ஈண்டுக் கலிக்காமருக்குச் சூலை வர, அவர் வாள் கொண்டு வயிற்றைக் கிழிக்க, அதுகண்டு நம்பிகள் தாமும் முடிவேனென்று அவ்வாளைப் பற்ற, அருளினால் கலிக்காமனார் உய்ந்து எழுந்து நம்பிகள் செயலைமாற்றி நட்பாயின நிலைமைகளின் விளைவால் உளதாயிற்று; வேறு அறிவிப்பு மொழிகளா |
|
|
|
|