பக்கம் எண் :

424திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  அனல் செய் வேல் குடைவது - உள்ளே கூரிய உளைதில் செய்து வேதனை விளைத்தற்குவமை; கூரிய வேல் ஒன்றே போதிய தாயினும் விரைவும் சுடுவேதனையும் கூடி வேதனை மிகுதற்கும் அனல் செய்தலும் சேர்த்துக் கூறினார். அது போலச் சூலை நோயொன்றுமே தன்னியல்பில் உட்குடைந்து வேதனை செய்யப் போதியதாயினும், ஆதியார் அவ்வாற்றால் அருளுதலினால் அது விரைவும் மிகுதிப்பாடும் பெற்றதென்ற பொருளிலும் வைத்துக் கண்டுகொள்க; இக்கருத்தினை "இன்னம் புண்செய் நோவின் வேலெறிந்தாற் போலும் புகல்வதொன்றென்றார்" (சிறுத்.புரா-50-3709) என்று மேல் வேறோருவமையில் விளக்குதல் காண்க, இவ்வரிய உவமை நயத்தினையே "எண்ணிலா வருந்தவத்தோ னியம்பியசொன் மருமத்தி னெறிவேல் பாய்ந்த, புண்ணிலாம் பெரும்புழையிற் கனனுழைந்தாலெனச் செவியிற் புகுத லோடும்" என்று கம்பன் எடுத்தாண்டு மேலும் விளக்க முயலுதல் காண்க. என்ன - உவமவாசகம்,
  உடைந்து - உடைதல் - உள்ளே உடல் வலி சிதறி நைதல்.
  பூதநாயகர் - பூதம் - உயிர்கள்; "பூத பரம்பரை பொலிய"(1899); உயிர்களைக் காக்கும் தலைவர்; இடநோக்கிக் காக்கும் கடமைப்பாடு பற்றிக் கூறினார்.
  பூதம் - சிவ - பூதங்கள் என்றலுமாம். பற்றி - சரணாகக் கொண்டு;
  போற்றுகின்றார் - இதனை மேற்பாட்டில் விரிக்கின்றார்; முற்றெச்சம்; போற்றுகின்றாராகிப் போற்ற என்க. போற்றுதல் - ஈண்டு வழிபடுதல் துதித்தல் என்ற பொருளில் வந்தது.
  ஏவும் சூலை - என்பதும் பாடம்.
 

390

  3545. (வி-ரை) சிந்தையால்....போற்றி செய்ய - நோயினால் உள்ளுடைந்து உடல் வீழ்ந்து விட்டபடியால் மனத்தாலும் வாக்கினாலும் என்று மன மொழிகளிரண்டுமே கூறினார்; அன்பர் - கலிக்காமனார்.
  திருந்து அடி - உயிர்கள் திருந்துதற் கேதுவாகிய அருள் புரியும் திரு அடி; திருத்தும் என்பது.
  எந்தமை ஆளும் - எமது தலைவர்; ஆளுதல் - பத்தி வைராக்கிய நெறியினை உலகுக்குக் காட்டி வழிப்படுத்துதல்; நாயனார் என்ற தன்மையின் பொருள்.
  வந்து உனை வருத்தும் - நம் அருளினாலே உன்பால் வந்து என்பது குறிப்பு. வந்து - உன் உடல்பற்றின நிலை முதலிய உலகியற் காரணங்களாலன்றி மற்றொரு வகையான் அருளப்பட்டு வந்து என்ற குறிப்புந் தந்து நின்றது. ஈசர் வந்து என்று கூட்டி உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
  தீர்க்கிலன்றி - ஒழியாது - எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு; முந்துற - முன்னே; முற்பட - விரைவாக; இங்கு இறைவர் அருளிய இவ்வெருளில் மெய்ம்மொழி பின்னர் நிகழ்ச்சியில் வன்றொண்டர் தீர்க்காமலே தீர்ந்தமையாற் பிழைபடுமோ? எனின், படாது; என்னை? நோய் தீர்தல் உடலினுள் உயிர் இருக்கும் நிலையினன்றி உயிர் தீர்ந்து போந்த நிலையினன்று; உயிர் போமாயின் அது நோய்த்தீர்வெனப் படாது; இதுபற்றியே மேல் "உயிரி னோடுஞ் சூலையும் தீர்ந்ததன்றே" (3551) என்பாராயினர்; ஈண்டு முந்துற என்றது வன்றொண்டன் தீர்க்கிலன்றி உயிர் போவதன் முன் தீர்வு பொருந்த என்ற குறிப்பும் தந்து நிற்றல் காண்க. வன்றொண்டன் வரவினால் உயிர் போக உடன் தீர்தலன்றி இச்சூலை நோய் முன்னர் ஒழியாது என்னும் குறிப்பும் காண்க.