|
|  |  | 
|  | உசிவமயம்
 | 
|  | 32. மூர்க்க நாயனார் புராணம் | 
  |  | தொகை | 
|  |          | "(நாட்டமிகு தண்டிக்கு) மூர்க்கர்க்கு மடியேன்" -         (5) |  | 
|  | - திருத்தொண்டத் தொகை | 
  |  | வகை | 
 |  |             | தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் றகுகவற்றாற் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருண்
 முண்டநன் னீற்ற னடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
 நண்டலை நீரொண் குடந்தையின் மேவுநற் சூதனையே.
 | 
 | 
|  | - திருத்தொண்டர் திருவந்தாதி - (38) | 
  |  | விரி | 
| 3618 |         | மன்னிப்பெருகும்பெருந்தொண்டை வளநாடதனில்வயல்பரப்பும் நன்னித் திலவெண் டிரைப்பாலி நதியின் வடபா னலங்கொள்பதி
 அன்னப் பெடைகள் குடைவாவி யலர்புக் காட வரங்கினிடை
 மின்னுக் கொடிக டுகிற்கொடிகள் விழவிக் காடு வேற்காடு.
 | 
 | 
|  | 1 | 
|  | புராணம் :- இனி, நிறுத்த முறையானே, ஆறாவது வம்பறா வரிவண்டுச் சருக்கத்துள், ஐந்தாவது   மூர்க்க நாயனார் புராணம் கூறத் தொடங்குகின்றார். மூர்க்க நாயனாரது சரித வரலாறும் பண்பும்   கூறும் பகுதி. | 
|  | தொகை:- மூர்க்கர் என்ற பெயரினையுடைய நாயனாருக்கும் நான் அடியேனாவேன்; மூர்க்கர்க்கும் - தண்டிக்கும் மூர்க்கர்க்கும் என்ற உம்மை எண்ணும்மை. இதனால் இந்நாயனாரது பெயரும் பண்புக் குறிப்பும் கூறப்பட்டன. | 
|  | வகை :- தண்டலை....மன்னன் - சோலைகள் சூழுந் திருவேற்காட்டூரின் தலைவர்; தகு கவற்றால்....வென்று - தக்க சூதாடுதலில் சூதாடு கருவியால் வரும் பந்தயப் பொருளை வலிய சூதர்களை வென்று; முன்....ஈபவன் - முன் தான் ஈட்டிய பொருளை எல்லாம் திருநெற்றியில் நல்ல நீற்றினை உடைய சிவனடியவர்களுக்குக் கொடுப்பவன்; மூர்க்கனென்பர்....சூதனையே - நண்டுகள் அலைதற்கிடமாகிய நீர்வளமுடைய திருக்குடந்தைப்   பதியில் வாழும் நற்சூதனை மூர்க்கன் என்று பெயர் சொல்லுவர். | 
|  | குடந்தையின் மேவு நற்சூதனைத் திருவேற் காட்டூர் மன்னன், தகுகவற்றாற் கொண்ட பொருள் அடியவர்க்கீபவன், மூர்க்கள் என்பர் என்று முடிபுகொள்க. |