(வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்) கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன் கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன் ஆரூர னாரூரி லம்மானுக் காளே. |