பக்கம் எண் :

பெரியபுராணம்217

     சேரலன்....நண்ணுவார் - அரசாள்பவரது கருத்துக்கு மாறுபட்டாராதலின்
அங்கிருக்க அஞ்சிச் சேரர் நாடு அணைந்தனர். சேரர் இவரது ஆட்சிக்குட்படாத
முடிமன்னர் என்பதும் இதனாற் பெறப்படும்.
 
     நண்ணுவார் - இருத்தி - எய்தியபின் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி
முடிக்க.                                                           4
     3934. (வி-ரை) ஒருமை உரிமை - ஒருமையாவது ஒரே நற்சார்பிற் செல்லும்
ஒழுக்கம்; உரிமையாவது முடியைப் பேணிச் சூட்டி வழிவழி காக்கும் உரிமை. சோழர்
ஒரு மரபுக்கே முடிசூட்டும் உரிமை என்பது மொன்று.
 
     ஒரு குடியை....இருத்தி - அம்பலவாணர் பூசைக்கும் திருவாபரணங்களின்
காவலுக்கும் ஒருகுடி இங்கு இருத்தல் வேண்டுமாதலின் அதனோடு இந்த
மணிமுடியினையும் காவல் புரியும்படி வைத்துச் சென்றனர் என்க.
 
     அருமை புரிகாவல் - அரிதாகிய காப்பு; அருமையாவது அதன்
தகுதிக்கேற்றபடி வல்லவாறு எல்லாம் இயற்றுதல்.
 
     இருமை மரபும் தூயவர் - “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” (திருமுருகு);
இருமைமரபு - தந்தைவழி தாய்வழி யிரண்டும்.
 
     வரும் ஐயறவு - முடிசூடுதற்கு எண்ணியபடி கிடைக்கப் பெறாதபடியால், வேறு
என் செய்வது என்று தோன்றாதநிலை ஐயுறவு எனப்பட்டது; முடிசூடுதலை விடுதலோ?
அன்றி அதற்கு வேறுவழி தேடுதலோ? இன்னது செய்வது என்று தோன்றாதநிலை.
 
     மன்றுளாடுங் கழல் பணிவார் - தில்லைவாழந்தணர்கள்பால் அந்த
மணிமுடியிருத்தலானும், அவர்களே அது சூட்டுவித்தற்குரிமையுடையா ராதலானும்,
அவருள் தாமும் ஒருவராய் உடையவராய் முதல்வராயுள்ள அம்பலவர் கழல்
பணிவாராகி முடிசூடப் பெறவேண்டி வேண்டினார் (3935) என்க. தில்லைவாழந்தணர்
புராணத்துள் முதலில் அம்பலவர் துதிசெய்தமைபற்றி உரைத்தவை ஈண்டு நினைவு
கூர்தற்பாலன. பணிவார் - முற்றெச்சம். பணிவார் - துயில்வோர்க்கு எனவரும்
பாட்டுடன் முடிக்க.
 
     பணிந்தார் - என்பதும் பாடம்.                                   5
 
     3935. (வி-ரை) அற்றை நாள் - ஐயுறவால் மனந்தளர்ந்து நின்று பணிந்த
அன்று. இரவின்கண் - கனவில் என்று கூட்டுக.
 
     பேறு - பேறாக; பேறாகப் பாதம் பெறவே என்க.
 
     பேறு - மணிமுடிகள் எல்லாம் சடப் பொருளாய் அழியுந்தன்மையன;
மலர்ப்பாதம் அவ்வாறன்றி ஞானமயமாய் என்றுமழியாத தன்மையுடையது. ஆதலின்
பேறு என்றார். “எவற்றையும் ஒருங்கே ஓரியல்பா னறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்
சுடர்முடியும்” (போதம் - 8. சிற்றுரை) என்றது காண்க.
 
     பாதமே முடியாகப் பெற்ற பேறு - உமது பாதம் என்னும் ஞானமயமாகிய
திருவடியின்கீழ் எனது முடியானது தாடலைபோல் அடங்கி நிற்க என்ற பொருட்
குறிப்பும் காண்க.
 
     பற்று விடாது துயில்வோர் - துயிலும்போதும் இந்நினைவு விடாத நிலையில்
துயில்வோர்.
 
     பாதமலரளிக்க உற்ற அருளால் - பாதங்களையே முடியாகச் சூட்டியருள
அத்திருவருளின் துணையாலே.