பக்கம் எண் :

பெரியபுராணம்613

 
     பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.      52
 
     (இ-ள்) சேரர்.....திருவுலாப்புறம் - சேரர்பெருமான் விண்ணப்பித்தருளிய அந்தத்
திருவுலாப் புறப்பாட்டினை; அன்று....தரித்து - (விண்ணப்பித்த) அன்று
சாரல்களையுடைய வெள்ளியங் கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட -
மாசாத்தனார் - அதனைத் தரித்து; இந்த.....பகர்ந்து - இந்த நிலவுலகத்தில்
வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிப்படச் சொல்லியருளி; எங்கும்.....நலத்தாலே
- நீர்மிகுதியுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுகினில் எங்கும் நன்மையாலே விளங்கியிட
நாட்டியருளினர்.
 
     (வி-ரை) நம்பிகளது பதிகம் வந்து வழங்கிய வரலாற்றினை விளக்கிய ஆசிரியர்,
அஃதற்றாயின், கயிலையில் இறைவரது திருமுன்பு சேரனார் கேட்பித்த திருவுலாப்புறம்
இந்நிலவுலகில் வந்து வழங்குமாறு யாங்ஙனம்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு,
அவ்வரலாறு கூறியது இத்திருப்பாட்டு.
 
     சேரர்....திருவுலாப்புறம் - சேரனார் திருகயிலையில் இறைவர் திருமுன்பு
கேட்பித்த திருவுலா. (4275).
 
     கயிலையிற் கேட்ட மா சாத்தனார் - கயிலை மலையில் அன்று உடனிருந்து
கேட்ட மாசாத்தனார். ஐயனார் - அரிகர புத்திரர் என வழங்கப்படுவர். தரித்து -
முற்றும் மேற்கொண்டு எடுத்து; சாத்தன் - தீயோரைத் தண்டிப்பவன்; சாத்திரங்களில்
வல்லவன்.
 
     பிடவூர்தனில் வெளிப்படப்பகர்ந்து - எங்கும் விளங்கிட நாட்டினர் -
பிடவூரினில் வெளிப்படப் பகர்ந்த வகையினாலே உலகில் விளங்கிடச் செய்தருளினர்.
நாரம் - நீர். நாரம் - நார்களின் தொகுதி - மக்கட் கூட்டம் எனினுமாம்.  

                                                                 52

     தலவிசேடம் :- திருப்பிடவூர் - இது தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று.
திருச்சிராப்பள்ளியினின்றும் பிரம்பலூருக்குப் போகும் கற்சாலைப் பெருவழியில்
திருச்சிராப்பள்ளியினின்றும் 15 நாழிகையளவிலுள்ள சிறுகனூருக்கு வட மேற்கே
இரண்டு நாழிகை யளவில் அடையத்தக்கது. துறையூருக்குக் கிழக்கில் 12 நாழிகையிலும்
அடையலாம். இப்போது திருப்பதட்டூர் - என வழங்குகிறது; இக்கோயிலினுள்
பழங்காலக் கல்வெட்டுக்கள் பல உண்டு. அவற்றால், பிடவூர் நாட்டுப் பிடவூர் என்பது
இதன் பெயர் என விளங்குகின்றது. கல்வெட்டுக்களில் இதற்கு மூவாயிர நல்லூர் -
பிரம்மதேயம் - என்றும் பெயர் கூறப்படுகிறது. "உறந்தைக் குணாது, அருங்கடிப்
பிடவூர், அறப்பெயர்ச் சாத்தன்" (புறம் 395-19-21) எனவருமாறு இவ்வூர் உறையூருக்குக்
கிழக்கில் உள்ளது; இங்கு மாசாத்தனார் கோயில் விளக்கம். ஆனால் இப்போது
கிலமாக உள்ளது. இவர் திருவுருவத்தில் கையில் திருவுலா ஏடு அமைந்தபடி உள்ளது;
இவர் அரங்கேற்றிய ஐயனார் என வழங்கப்படுவர் என்பது கன்ன பரம்பரை;
திருவஞ்சைக்களத்திலும் சாத்தனார் கோயில் தாபிக்கப்பட்டுள்ளதும் காண்க.1
மூலமூர்த்தி சுயம்பு; பதஞ்சலி வியாக்ரபாதர் இவர்களுக்குச் சநி உபாதி நீங்கின இடம்.
பிரமன் 12 இலிங்கங்கள் வைத்துப் பூசித்த பதி. பிரமனது பெருவடிவம் பெரு
வனப்பினதாய் முதற் சுற்றில் உள்ளது. முருகப் பெரு
___________________________
     1 இன்னும் இதுபற்றிய பல வரலாறுகள் "ஞானசம்பந்தம்" ஏழாவது ஆண்டு
மலரில் "தமிழ்" நூல்களும் கல்வெட்டுக்களும், என்ற கட்டுரையில் அன்பர்,
திரு.சுந்தரேச வாண்டையார் எழுதியுள்ளவற்றுள்ளும், அன்பர், திரு. பஞ்சநதம்
பிள்ளை எழுதிய தலவரலாற்றுள்ளும் காண்க.