| 
 
1191. நனிவளர் மதியொடு நாகம்வைத்தபனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
 முனிவரொ டமரர்கண் முறைவணங்க
 இனிதுறை வளநக ரிடைமருதே. 7
 1192. தருக்கின வரக்கன தாளுந்தோளும்நெரித்தவ னெடுங்கைமா மதகரியன்
 றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும்
 எரித்தவன் வளநக ரிடைமருதே. 8
 1193. பெரியவன் பெண்ணினொ டாணுமானான்வரியர வணைமறி கடற்றுயின்ற
 __________________________________________________ 7. பொ-ரை: நாள்தோறும் ஒரு கலையாக
நன்றாக வளர்தற்குரிய பிறை மதியோடு பாம்பையும்
உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை
சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான்
முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக
உறையும் வளநகர் இடைமருதாகும். கு-ரை: பனிமலர் - குளிர்ந்தமலர்,
முனிவர் முன்னும், தேவர் பின்னுமாக வணங்குதல் முறையாதலின்
முறை வணங்க என்றார். முனிவர்கள் வணக்கம்; உலகம்
உய்யவந்த நிஷ்காமிய வணக்கம்; தேவர்கள் வணக்கம்;
அசுரர் அழியத் தாம் வாழ வேண்டும் என்னும் காமிய
வணக்கம்; ஆதலின் அவர்கள் முன்னும் தேவர்கள்
பின்னும் முறையே வணங்க என்றது. 8. பொ-ரை: செருக்குற்ற அரக்கனாகிய
இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும்,
நீண்ட கையை உடைய பெரிய மத யானையை அக்காலத்தில்
உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய
அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய
சிவபெருமானது வளநகர் இடைமருதாகும். கு-ரை: அரக்கன் - இராவணன். ஒன்னலர்
- பகைவர். 9. பொ-ரை: எல்லோரினும் பெரியவனும்,
பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய
கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும்
கரியவனாகிய |