பக்கம் எண் :

 121. திருவிடைமருதூர்1125


1301. விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல்
எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே. 9

1302. மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை மனத்தவர் தேறமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே. 10

__________________________________________________

ஐயாறு என்கின்றது. விடைத்த - செருக்கிய. நல்வெற்பு - கயிலை. இறை - சிறிது. இறையூன்றியது கருணையின் மிகுதியால்.

9. பொ-ரை: வானகத்தே வாழ்வார் தம்மொடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

கு-ரை: இந்திரன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இவர்கள் வழிபட, திருமாலும் பிரமனும் காண்டற்கரிய கடவுள் நகர் ஐயாறு என்கின்றது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.

10. பொ-ரை: தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

கு-ரை: மருண்ட மனத்துச் சமணர்கள் முதலாயினார்களிடம் பொருந்தாது. தெளிந்த மனத்தவர்களே! உறுதியாகத் தெளிவுறுங்கள்; அருள் உடைய அடிகள் இடம் ஐயாறே என்கின்றது.

மருள், இருள் - அறியாமை. இணை துவர் போர்வையினார் - இரண்டான காவிப் போர்வையுடையவர்கள்.